இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, June 26, 2009

வரதட்சணை வழக்கில் இரண்டு மாத பெண் குழந்தையும் குற்றவாளி


வரதட்சணை வழக்கில் இரண்டு மாத பெண் குழந்தையும் குற்றவாளி


இரண்டு மாதக்குழந்தையை குற்றவாளியாக பதிவு செய்து, ஜhமின் கொடுத்து நீதித்துறை தன்னை கவுரவப்படுத்திக் கொண்டிருக்கிறது. என்ன கொடுமை!!!! இது தான் நாட்டில் நடக்கும் சட்ட வியாபாரம். அப்பாவிகளுக்கு நீதி கிடைக்குமா?

பச்சிளம் குழந்தையை இங்கே காணுங்கள்:
http://ibnlive.in.com/videos/95365/stepmom-names-twomonthold-in-dowry-fir.html

Dinamalar News: June 24, 2009

மும்பை:மும்பையில் வரதட்சணை கொடுமை வழக்கில் சேர்க்கப்பட்ட இரண்டு மாத பெண் குழந்தைக்கு, செஷன்ஸ் கோர்ட் முன்ஜாமீன் வழங்கியது. அந்தக் குழந்தை, ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும், 10 ஆயிரம் ரூபாய்க்கான உத்தரவாதத்தைத் தர வேண்டும் என, தெரிவிக்கப் பட்டுள்ளது. வரதட்சணை கொடுமை வழக்கில் இரண்டு மாத பெண் குழந்தை சேர்க்கப்பட்ட விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.மும்பையைச் சேர்ந்தவர் சம்சுதீன் கான். இவரின் முதல் மனைவி ஷகிலா. முஸ்லிம் சட்டப்படி அவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்து விட்டார். அதன்பின் ரேஷ்மா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு, ஜோயா என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 14ம் தேதி சம்சுதீன் கான், அவரின் இரண்டாவது மனைவி ரேஷ்மா, சம்சுதீனின் தாயார், சகோதரி மற்றும் இரண்டு மாத குழந்தை ஜோயா உட்பட, மொத்தம் எட்டுப் பேருக்கு எதிராக ஷகிலா வரதட்சணை கொடுமை புகார் ஒன்றைக் கொடுத்தார். மும்பையின் புறநகர் பகுதியான குர்லாவில் உள்ள நேரு நகர் போலீஸ் நிலையத்தில் இந்த புகாரை அளித்தார்.உடன், குழந்தை ஜோயா உட்பட எட்டு பேரையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் விசாரித்தனர். பின்னர் குழந்தை ஜோயாவை தவிர்த்து மற்றவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தனர். இருப்பினும், ஷகிலா கொடுத்த புகாரில் குழந்தையின் பெயர் இருந்தது.அதனால், மற்றவர்களுக்கு முன்ஜாமீன் பெறும் போது, குழந்தைக்கும் பெற வேண்டும் என, வக்கீல் தெரிவித்தார். இதையடுத்து, ஜோயா உட்பட எட்டு பேர் சார்பில் முன்ஜாமீன் கேட்டு மும்பை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.நீதிபதி சர்தேசாய் முன் மனு விசாரணைக்கு வந்த போது, இரண்டு மாத குழந்தை ஜோயாவுடன் அவரின் தாயாரும், மற்றவர்களும் ஆஜராகினர். ஜோயா உட்பட ஏழு பேருக்கு மட்டும் முன்ஜாமீன் வழங்கப்பட்டது.

சும்சுதீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனால், அவரின் சார்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டு, அது இன்று விசாரணைக்கு வருகிறது.ஜோயா குடும்பத்தினரின் வக்கீல் அனில் போலே இதுபற்றி கூறுகையில், "முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில், குழந்தை ஜோயாவின் பெயர் மற்றும் வயதை குறிப் பிட்டிருந்தேன். ஆனால், போலீசாரோ, அரசு தரப்பு வக்கீலோ அதை கவனத்தில் கொள்ளவில்லை' என்றார்.வரதட்சணை கொடுமை வழக்கில் இரண்டு மாத குழந்தையின் பெயர் சேர்க்கப்பட்ட விவகாரம் மும்பையில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

Sunday, June 14, 2009

கள்ளக் காதலுக்காக கணவனை கொன்ற கர்ப்பிணி மனைவி

கள்ளக் காதலுக்காக கணவனை கொன்ற கர்ப்பிணி மனைவி

Dinamalar News: June 15,2009

திருமணம் முடிந்து பத்து மாதங்களே ஆன நிலையில், கள்ளகாதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த கர்ப்பிணி மனைவியை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே விளத்தூரை சேர்ந்த கோவிந்தராஜ்(35). இவருக்கும் அபிராமம் அருகே உடையநாதபுரத்தை சேர்ந்த பானுமதி(25) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. பானுமதி தற்போது ஆறு மாதம் கர்ப்பமாக உள்ளார்.

அபிராமம் அருகே வடக்கூரை சேர்ந்த மூளிமுருகன்(35) என்பவருக்கும், பானுமதிக்கும் திருமணத்திற்கு முன்பே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. திருமணத்திற்கு பின் அடிக்கடி தமது ஊருக்கும் வரும் பானுமதி, மூளிமுருகனை சந்தித்து வந்துள்ளார். கடந்த 7ம் தேதி உடையநாதபுரத்தில் உறவினர் நிகழ்ச்சிக்காக பானுமதியும், கணவர் கோவிந்தராஜூம் வந்தனர். அதன் பின் கோவிந்தராஜ் வீடு திரும்பவில்லை. கடந்த 9ம் தேதி பிச்சானேந்தல் கண்மாயில் சந்தேகமான முறையில் கோவிந்தராஜ் பிணமாக கிடந்தார். பானுமதி மீது சந்தேகித்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் "கள்ளகாதலன் சந்திப்பிற்கு கணவர் கோவிந்தராஜ் இடையூறாக இருந்ததால், நிகழ்ச்சிக்கு வரும் போது பிச்சானேந்தல் கண்மாயில் கள்ளகாதலன் மூளிமுருகனுடன் சேர்ந்து கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்தோம்' என, பானுமதி ஒப்புக்கொண்டார். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
-------------------------------------------------------------------------------------
இதுவே நவநாகரீக நகரத்து மங்கையாக இருந்திருந்தால் கணவன் மீது பொய் வரதட்சணை வழக்கு போட்டு கணவனை நடமாடும் பிணமாக்கி அவனது குடும்பத்தை சீரழித்து தனது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்திருப்பாள். செய்தியிலுள்ள இந்தப் பெணணுக்கு இந்திய
"சட்டத்தைப்பற்றி விழிப்புணர்ச்சி இல்லாததால்" பாவம் கணவனை கொலை செய்துவிட்டு மாட்டிக் கொண்டுவிட்டாள்.

Tuesday, June 09, 2009

சுங்கவரி என்றhல் என்னவென்றே தெரியாத படித்த கோடீஸ்வர கண்மணி!

பிரபல பெண் தொழிலதிபருக்கு ஜாமீன்

Dinamalar News: June 10, 2009

மும்பையைச் சேர்ந்த பிரபல பெண் தொழிலதிபர் ஷீத்தல் மபத்லால். இவரின் குடும்பத்தினர் தான், மபத்லால் குரூப் நிறுவனங்களை நிர்வகித்து வருகின்றனர். கடந்த 12ம் தேதி லண்டனிலிருந்து மும்பை வந்த ஷீத்தல், சுங்க இலாகா அதிகாரிகளின் சோதனைக்கு ஆட்படாமல், விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்டார். ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க மற்றும் வைர நகைகளைக் கொண்டுவந்த அவர், அவற்றுக்கான வரியைச் செலுத்தாமல் தப்பிக்க முற்பட்டதாக, இந்திய சுங்கச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரின் சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஷீத்தலின் சார்பில் ஆஜரான வக்கீல், "என் கட்சிக்காரருக்கு எதிராக வேறு எந்த வழக்கும் இல்லை. சட்ட விதிகளை மீறியிருந்தால், அதற்கான வரியைச் செலுத்தவும் தயாராக உள்ளார்' என்றார். உடன், ஐந்து லட்சம் ரூபாய் ஜாமீனில் அவரை விடுவிக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

மபத்லால் குடும்ப வாரிசான அதுல்யாவை மணக்கும் முன், ஷீத்தல் மாடல் அழகியாகவும், சமூக ஆர்வலராகவும் இருந்தார்.

500 ருபாய் லஞ்சம் வாங்கிய அப்பாவி (பெண்) கண்மணி!

லஞ்சம் வாங்கிய பெண் அலுவலர் கைது
Dinamalar News: June 10,2009

திருமண உதவி திட்டத்திற்கு லஞ்சம் வாங்கிய மேல்மலையனூர் ஒன்றிய சமூக நல விரிவாக்க பெண் அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா தொரப்பாடியைச்சேர்ந்தவர் ஆறுமுகம். தனது மகளுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி நடந்த திருமணத்திற்காக திருமண உதவித்திட்டம் மூலம் நிதி உதவி பெற மேல்மலையனூர் ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

இதற்கான தொகை அரசால் ஒதுக்கப்பட்டு காசோலை தயார் நிலையில் உள்ளது. இந்த காசோலையை தருவதற்கு மேல்மலையனூர் ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் வட்டார சமூக நல விரிவாக்க அலுவலர் மஞ்சுளா 500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து, ஆறுமுகம் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை நேற்று காலை 8 மணிக்கு மஞ்சுளாவின் வீட்டிற்கு ஆறுமுகம் மகன் வேலுராஜா எடுத்துச் சென்றார். அவருடன் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த மஞ்சுளா காசோலையை வேலுராஜாவிடம் கொடுத்துவிட்டு லஞ்சமாக 500 ரூபாயை வாங்கினார். அப்போது ஒன்றிய அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்த விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் குப்புசாமி மற்றும் போலீசார் கையும் களவுமாக மஞ்சுளாவை கைது செய்தனர். விசாரணைக்காக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்திற்கு மஞ்சுளாவை அழைத்து சென்றனர்.



“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.