இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, June 24, 2011

பெண்ணுக்கு “செக்ஸ் டார்ச்சர்” கொடுக்க குடும்பப் பெண்கள் உதவுகிறார்களா?

அருப்புக்கோட்டை: மருமகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த மாமனார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டியை சேர்ந்தவர் ராதா (27) இவருக்கும் ராமநாதபுரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த காய்கறி கமிஷன் ஏஜென்ட் வெள்ளைச்சாமி (35) க்கும் கடந்த 2009 ல் திருமணம் நடந்தது. குழந்தை இல்லாததால் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டி, "ஆஸ்பத்திரி செலவிற்காக 5 லட்சம் ரூபாய், பைக் வாங்கி வரும்படி கேட்டு '' மனைவியை வெள்ளைச்சாமி கொடுமைபடுத்தி உள்ளார். இதனால் ராதா தனது தந்தை வீட்டிற்கு வந்துவிட்டார்.
மோட்டார் பைக்கிற்கும் குழந்தை பிறப்பிற்கும் ஏதாவது மருத்துவ ரீதியான தொடர்பு இருக்கிறதா? - அந்த வரதட்சணை தெய்வத்திற்குத்தான் தெரியும்!

இதனிடையே ,"தன்னை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாகவும், மாமனார் பாக்கியம் செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாகவும், இதற்கு மாமியார் முத்துலட்சுமி, நாத்தனார் கோகிலா, மைத்துனர் மனைவி உமா ஆகியோர் உடந்தையாக இருந்ததாக ,''கூறி அருப்புக்கோட்டை மகளிர் போலீசில் புகார் செய்துள்ளார். அதன்படி போலீசார் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நல்லதொரு குடும்பம் இந்தியப் பல்கலைக் கழகம். மாமனார் தனது மருமகளை செக்ஸ் “டார்ச்சர்” செய்ய மாமியார், நாத்தனார், மற்றும் மைத்துனர் மனைவி ஆகியோர் உடந்தையாக இருந்ததாக புகார் செய்யப்பட்டு அதை கடமை தவறா கண்ணியமான காவல்துறையும் வழக்காகப் பதிவு செய்திருக்கிறார்கள்!

ஒரு ஆண் (மாமனார்) தவறு செய்ய அவரது மனைவியும் (மாமியார்), போதாக்குறைக்கு அவரது மகளும் (நாத்தனார்) மற்றும் மற்றொரு மருமகளும் (மைத்துனரின் மனைவி) உதவி செய்திருக்கிறார்களா? என்ன கொடுமை இந்த நாட்டில்!


ஒரு பெண்ணை “ வரதட்சணைக் கொடுமையோடு சேர்த்து செக்ஸ் டார்ச்சர்” செய்யவும் குடும்பத்திலுள்ள மூன்று பெண்களே உதவியிருக்கிறார்களா?

இதற்குப் பெயர்தான் இந்தியப் பெண்கள் பாதுகாப்பு சட்டம்!
செய்தித்தாள் கூட இந்த செய்திக்கு எப்படி மசாலா தடவி தலைப்பு கொடுத்திருக்கிறது பாருங்கள். இதுதான் இந்தியா. காசிற்காக எதை வேண்டுமானாலும் செய்கிறார்கள். வாழ்க பாரதம்!


Thursday, June 23, 2011

பிரியாத வரம் வேண்டும்

கள்ளக்காமமும் பொய் வரதட்சணை வழக்குகளும் இணைபிரியாத ஜோடிகள். இந்தியாவில் திருமணம் செய்யும் கணவன் மனைவிக்கிடையே பிளவு ஏற்பட்டாலும் ஏற்படும் இந்த கள்ளக்காமமும், பொய் வரதட்சணை வழக்குகளும் ஒன்றைவிட்டு ஒன்று என்றுமே பிரியாது. அதுபோலவே இந்த பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கும் அப்பாவிகளை காவல்-நீதி என்ற இரண்டு இணைபிரியா ஜோடிகள் கடைசிவரை அலையவைத்து உயிரை வாங்காமல் விடாது.

கள்ளக்காமம் இருக்கும் இடத்தில் கண்டிப்பாக பொய் வரதட்சணை வழக்கு இருக்கும். இவையிரண்டும் இருக்கும் இடத்தில் காவல்துறை கண்டிப்பாக தன் கடமையைச் செய்யும்!

ஜூன் 24,2011 தினமலர்

விழுப்புரம் : கள்ளக்காதலன் மூலம், கணவரை கொலை செய்து நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டார். மகளின் கணவனை கொலை செய்ய உடந்தையாக இருந்த, சப்- இன்ஸ்பெக்டரும் சிக்கியுள்ளார். விழுப்புரம் நாராயணன் நகர் எம்.ஜி.ஆர்., தெருவில் வசித்து வந்தவர் தீனதயாளன், 29. அதே பகுதியில் பானிபூரி கடை நடத்தி வந்தார். இவரது மனைவி லட்சுமி, 27. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 22ம் தேதி அதிகாலை தீனதயாளன் கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுக்கையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது மனைவி லட்சுமி கொடுத்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதிகாலை 4 மணிக்கு, வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் கணவரை அடித்துக்கொலை செய்துவிட்டு, தன்னையும் கட்டிப்போட்டு விட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக புகாரில் தெரிவித்திருந்தார்.

லட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகம் ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் தலைமையிலான தனிப்படை போலீசார், லட்சுமியின் மொபைல் எண்ணை வைத்து விசாரித்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கொலை செய்யப்பட்டு இறந்த தீனதயாளன் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன், தனது உறவினரான சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மகள் லட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே விழுப்புரம் சிஸ் நகரில் வசித்து வந்த தீனதயாளன், கடந்த 6 மாதத்திற்கு முன் எம்.ஜி.ஆர்., நகரில் வாடகை வீட்டில் குடியேறினார்.

லட்சுமியின் தந்தை சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜ் விருத்தாசலத்தில் பணியாற்றியபோது, அங்கு போலீஸ் நண்பர்கள் குழுவில் இருந்த முல்லைத்தோட்டத்தைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வன், 33, அடிக்கடி நாகராஜ் வீட்டிற்கு வந்து சென்றார். அப்போது தந்தை வீட்டில் இருந்த லட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளத்தொடர்பாக மாறியது. அதன் பிறகு விழுப்புரத்தில் உள்ள லட்சுமி வீட்டிற்கு வந்து சென்றார்.

சந்தேகமடைந்த தீனதயாளன், மனைவி லட்சுமியை கண்டித்தார். விரக்தியடைந்த லட்சுமி, கணவர் சந்தேகத்தில் டார்ச்சர் செய்வதாக தந்தை நாகராஜிடம் கூறினார். இதனை தட்டிக்கேட்டதில் மாமனார், மருமகனிடையே விரோதம் ஏற்பட்டது. தொடர்ந்து கணவர் டார்ச்சர் செய்வதாக லட்சுமி கூறியதால், அவரது குடும்ப நண்பரான முத்தமிழ்ச்செல்வனிடம் தனது மருமகனை மிரட்ட வேண்டுமென, நாகராஜ் தெரிவித்தார்.

“டார்ச்சர்” - இந்திய சட்ட (IPC) விளக்கம்: கள்ளக்காமத்தில் ஈடுபடும் மனைவியை கணவன் தட்டிக்கேட்டால் அதற்குப் பெயர் “டார்ச்சர்” (Cruelty).

மேலுள்ள செய்தியில் “டார்ச்சர்” செய்த கணவனை மனைவி & Co. போட்டுத்தள்ளிவிட்டார்கள். ஆனால் பெரும்பாலான நவநாகரீக மங்கைகள் அவர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ள இந்திய சிறப்புச் சட்டங்களான வரதட்சணை சட்டங்களை பக்குவமாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.

தன்னுடைய கணவன் வரதட்சணை அல்லாத பிற விஷயத்திற்காக (உதாரணத்திற்கு கள்ளக்காமத்தைப் பற்றி கணவன் கேட்பது) “டார்ச்சர்” செய்வதாக மனைவி போலிஸில் புகார் கூறினாலும் போதும் எந்தவித ஆதாரமும் இன்றி, எந்தவித காரணமும் இன்றி உடனடியாக காவல்துறை தனது கடமையைச் செய்து IPC498A பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கணவனை அவனது குடும்பத்தோடு சேர்த்து கைது செய்துவிடுவார்கள்.

இதுபோன்ற கள்ளக்காமம் மற்றும் பிற இழிசெயல்களில் ஈடுபடும் மனைவிகளின் நற்பணிகளுக்கு உதவுவதுதான் இந்திய வரதட்சணை தடுப்புச் சட்டங்கள். இதுபோன்ற மனைவியர்தான் இந்த சட்டங்களை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

The ingredients of Section 498-A are as follows:

“ 498A: Husband or relative of husband of a woman subjecting her to cruelty- Whoever, being the husband or the relative of the husband of a woman, subjects such woman to cruelty shall be punished with imprisonment for a term which may extend to three years and shall also be liable to fine.

Explanation – For the purpose of this section ’cruelty’ means –

(a) any wilful conduct which is of such a nature as is likely to drive the woman to commit suicide or to cause grave injury or danger to life, limb or health (whether mental or physical) of the woman;

or

(b) harassment of the woman where such harassment is with a view to coercing her or any person related to her to meet any unlawful demand for any property or valuable security or is on account of failure by her or any person related to her to meet such demand.”

ஏலச்சீட்டு நடத்தி வந்த முத்தமிழ்ச்செல்வன், சீட்டு பணம் வாங்க கடந்த ஒரு மாதத்திற்கு முன் சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜை பார்க்க எடைக்கல் ஸ்டேஷனுக்கு வந்தார். அப்போது மருமகனை கண்டிக்க வேண்டுமென கூறிய விஷயத்தை நாகராஜ் நினைவுபடுத்தினார்.

கள்ளத்தொடர்பில் இருந்த லட்சுமியும் நேரடியாக முத்தமிழ்ச்செல்வனை தொடர்புகொண்டு, டார்ச்சர் செய்யும் கணவனை தீர்த்துக்கட்ட வேண்டுமென வற்புறுத்தி வந்தார். இதற்கான திட்டம் வகுத்தபடி அதனை நிறைவேற்ற முத்தமிழ்ச்செல்வன், அவரது நண்பர் மோகனுடன், 22, சேர்ந்து கடந்த 21ம் தேதி இரவு விழுப்புரம் வந்தனர்.

புதிய மொபைல் போன் மூலம் லட்சுமி தகவல் கொடுத்தார். தீனதயாளன் தூங்கியபிறகு தீர்த்துக்கட்ட திட்டமிட்டு வந்த இவர்கள் இருவரும் கல்யாண் தியேட்டரில் படம் பார்த்தனர். "சீக்கிரம் வந்து தீர்த்துக்கட்டுங்கள்' என, அடிக்கடி மொபைல் போன் மூலம் லட்சுமி தகவல் கொடுத்தார்.

அதிகாலை 4.30 மணிக்கு, தீனதயாளன் வீட்டின் பின்புற சுவர் வழியாக இருவரும் ஏறி வந்தனர். லட்சுமி தயாராக கதவைத் திறந்து வைத்திருந்ததால், உள்ளே வந்த இவர்கள் அறையில் தூங்கிக் கொண்டிருந்த தீனதயாளனை இரும்பு பைப்பால் அடித்துக் கொலை செய்தனர். தீனதயாளன் அலறல் சத்தம் கேட்டு, அவரது மகள் ரேணுகாதேவி எழுந்தபோது பக்கத்தில் இருந்த லட்சுமி அவளை தட்டி படுக்க வைத்தார்.

தீனதயாளனை கொலை செய்த இருவரும் சந்தேகம் வராமல் இருக்க லட்சுமியையும் கட்டிப் போட்டுவிட்டு, அவரது தாலிச்செயின், நகைகளையும் வாங்கிக்கொண்டு பின் பக்க வழியாக தப்பிச் சென்றனர். போலீஸ் மோப்ப நாயை திசைத் திருப்ப மிளகாய் பொடியை தூவுவதாக நினைத்து மஞ்சள் பொடியை தூவிவிட்டு, கொள்ளையர்கள் கணவரை கொலை செய்துவிட்டு, நகைகளை திருடிச் சென்றதாக லட்சுமி நாடகம் ஆடினார்.

முத்தமிழ்ச்செல்வன், மோகன், லட்சுமி மற்றும் உடந்தையாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோரை, இந்த வழக்கு தொடர்பாக விழுப்புரம் தாலுகா போலீசார்பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எஸ்.ஐ., தலைமறைவு டி.எஸ்.பி., பேட்டி : விழுப்புரம் டவுன் டி.எஸ்.பி., மாதவன் நேற்றிரவு நிருபர்களிடம் கூறியதாவது: விழுப்புரம் பானிபூரி கடை உரிமையாளர் தீனதயாளன் கொலை வழக்கில், தாலுகா இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் தலைமையில் தனிப்படையினர் விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். தீனதயாளனின் மனைவி லட்சுமி, அவரது தந்தை சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், கள்ளக்காதலன் முத்தமிழ்ச்செல்வன், அவரது கூட்டாளி மோகன் ஆகியோர் கடந்த 25 நாட்களுக்கு முன், நாகராஜ் வீட்டில் சதித் திட்டம் தீட்டினர்.

கடந்த 10 நாட்களுக்கு முன் எடைக்கல் போலீஸ் ஸ்டேஷனிலும் சதித் திட்டம் குறித்து பேசியுள்ளனர் (காவல்நிலையம் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது!). அதன்படி கடந்த 21ம் தேதி தீனதயாளனை திட்டமிட்டு கொலை செய்துவிட்டு கொள்ளை நாடகம் ஆடியுள்ளனர். இந்த வழக்கில் துரிதமாகச் செயல்பட்ட போலீசார் லட்சுமி, முத்தமிழ்ச்செல்வன், மோகனை கைது செய்துள்ளனர். கொள்ளை போனதாகக் கூறப்பட்ட தங்க நகைகள் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய இரும்பு பைப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சதித் திட்டம் தீட்டி தலைமறைவாகியுள்ள சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜை, தனிப்படை தேடி வருகிறது. இவ்வாறு டி.எஸ்.பி., மாதவன் கூறினார்.



Wednesday, June 22, 2011

யாரைத்தான் நம்புவதோ?

முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி மீது சொத்து குவிப்புத் தொடர்பாக விசாரணை ஆரம்பமாகிறது. அப்படியென்றால் அவர் பதவிக்காலத்தில் அவர் கூறிய பல தீர்ப்புகளின் நிலை?

மாஜி நீதிபதி மீது சொத்துகுவிப்பு புகார்
மாஜி நீதிபதி சொத்து குவிப்பு: விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு
தினமலர், ஜூன் 23,2011

புதுடில்லி: வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மீது விசாரணை நடத்த வருவாய்த்துறைக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் சப்ரீம் கோர்ட் நீதிபதி கே.ஜி பாலகிருஷ்ணன், மனித உரிமை கமிஷன் தலைவராக உள்ளார். இவர் மீது வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்‌த்துள்ளதாகவும், இவை உறவினர்கள் ‌பெயரில் பினாமியாக உள்ளதாக புகார்கள் எழுந்தது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஏராளமான மனுக்கள் வந்துள்ளன. இத்தகைய மனுக்கள் அனைத்தும் மத்திய வருவாய்த்துறை செயலருக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. இந்நிலையில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் , விசாரணைப்பிரிவின் வாயிலாக, மாஜி நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. மேலும் இவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், இது தொடர்பாக ஜனாதிபதியிடம் புகார் அனுப்பி வைக்கப்பட்டு, தேசிய மனித உரிமை கமிஷன் தலைவர் பதவியிலிருந்து விலக வலியுறுத்தப்படும்.இவ்வாறு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறுகையில், ஏற்கனவே நான் எனது சொத்து விவரங்களை வெளியிட்டுவிட்டேன். ஆகையால் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.

Sunday, June 12, 2011

மகளின் வாழ்வை சீரழிக்கும் இந்தியப் பெற்றோர்கள் - 3

பெற்ற மகளின் வாழ்வை சீரழிப்பதில் பல வகை இருக்கிறது.

பெண்ணைப் பெற்றவர்கள் தங்களின் “ஈகோ”விற்கு பலியாக மகளை ஏவிவிட்டு அவளது கணவன் மீதே பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்யவைத்து மகளின் வாழ்வை சீரழிப்பதுதான் பெரும்பாலும் நடைமுறையில் இருந்துகொண்டிருக்கும் மிகவும் பிரபலமான வழக்கம்.

மற்ற வழிமுறைகளை இங்கே காணலாம்:
1. இந்தியாவில் பெண்ணைப் பெற்றவர்கள் அடிக்கும் லூட்டி
2. மகளின் வாழ்வை நாசமாக்கும் இந்தியப் பெற்றோர்கள்


ஆனால் இப்போதெல்லாம் பெண்ணைப் பெற்றவர்கள் புதுப்புது வழிமுறையைக் கண்டுபிடித்து வருகிறார்கள். இது எங்குபோய் முடியும் என்று யாருக்குமே தெரியவில்லை. கடைசியில் பாதிக்கப்படுவது அப்பாவிப் பெண்கள்தான்.

மகளின் காதல் கணவர் கொலை: சென்னை என்ஜினீயரை கொல்ல ரூ.5 லட்சம் பணம்; மேலும் 2 பேருக்கு தொடர்பு

விழுப்புரம், ஜூன்.12-2011 மாலை மலர்

சென்னை சிந்தாதிரிப் பேட்டை அய்யாவு முதலியார் தெருவை சேர்ந்த என்ஜினீயர் பார்த்தசாரதியும் பெரம்பூரை சேர்ந்த என்ஜினீயர் நரசிம்மனின் மகள் சரண்யாவும் காதலித்து வந்தனர். இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் 10-ந் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து சரண்யாவின் தந்தை கூலிப்படையை ஏவி பார்த்தசாரதியை கொலை செய்தார். தனிப்படை போலீசார் சரண்யாவின் தந்தை நரசிம்மன் மற்றும் ஜானகிராமன், ஹேமந்த் ராம், திலீப், சலுஜா ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதான நரசிம்மன் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

என் மகள் சரண்யா காதல் விவகாரம் தெரியவந்ததும் பார்த்தசாரதியை மிரட்டினோம். ஆனால் காதலை கைவிடாமல் அவர் எனது மகளை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகும் சரண்யாவை பிரிந்து செல்லும்படி மிரட்டி வந்தோம். பார்த்தசாரதி கேட்கவில்லை. எனவே தான் சலுஜா மூலம் கூலிப்படையை ஏவி பார்த்தசாரதியை தீர்த்து கட்டி முடிவு செய்தேன்.

ஜானகி ராமன், ஹேமந்ராம், திலீப் ஆகியோரை சலுஜா ஏற்பாடு செய்து கொடுத்தார். பார்த்தசாரதியை மிரட்டி விரட்டிவிடலாம் என நினைத்தோம். இதற்காகவே கூலிப்படை மூலம் காரில் கடத்தினோம். ஆனால் பார்த்தசாரதி பணியாததால் வேறு வழியில்லாமல் கொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
கூலிப்படையினருக்கு முதலில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கொடுக்கப்பட்டது. அதில் ஜானகிராமன் மோட்டார் சைக்கிள் வாங்கி பார்த்தசாரதி நடவடிக்கைகளை கண்காணித்து வந்தான். கொலை நடந்த பிறகு மேலும் ரூ.4 லட்சம் கொடுத்தேன். மொத்தம் ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் கொடுக்கப்பட்டு உள்ளது.மேலும் ரூ.5 லட்சம் கேட்டனர். அதையும் கொடுக்க இருந்தேன்.

இந்த நேரத்தில்தான் பார்த்தசாரதி பிணத்தை கண்டுபிடித்த போலீசார் நாங்கள்தான் கொலையாளி என்பதை தெரிந்து கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கொலையில் கூலிப்படை தலைவனாக திலீப் செயல்பட்டு வந்துள்ளான். பார்த்தசாரதியை, திலீப், ஜானகிராமன், ஹேமந்தராம் 3 பேர் மட்டுமே காரில் கடத்தி சென்றதாக முதலில் தகவல் வந்தது. ஆனால் மேலும் 2 பேர் அந்த காரில் இருந்து உள்ளனர். அவர்கள் யார்? என்று விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே சரண்யா தனது தாயாரும் பார்த்தசாரதி கொலையில் சம்பந்தப்பட்டு இருப்பதாக புகார் கூறியுள்ளார். எனவே அவரிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

=====

தான் பெற்ற மகளை கட்டுப்படுத்த முடியவில்லையென்றால் அவளை காதலித்தவனுக்குத் தண்டனை தருவது எந்த வகையில் நியாயமாகும்? இப்படித்தான் இந்தியாவில் பெண்ணைப் பெற்றவர்கள் பலர் தங்கள் மகள் செய்யும் தவறுகளை தட்டிக்கேட்காமல் அவளது கணவன் மீது பொய் வரதட்சணை வழக்குகளை பதிவு செய்து துன்புறுத்தி வருகிறார்கள். எது எப்படியோ கடைசியில் தங்கள் மகளின் வாழ்வை தாங்களே சீரழித்த திருப்தி அவர்களுக்குக் கிடைக்கிறது. இதுதான் இன்றைய மனநிலை.


காவலா காவலா

சமீபத்தில் அமெரிக்க நாட்டில் இந்திய தூதரக அதிகாரியின் மகளை ஒரு வழக்கிற்காக அமெரிக்க போலிஸ் கைது செய்து பிறகு விட்டுவிட்டார்கள். அதற்காக இந்திய அரசாங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது. அந்தப் பெண்ணும் அமெரிக்க அரசாங்கத்திடம் பல கோடி நஷ்ட ஈடு கேட்டிருந்தார். அது பற்றிய செய்தியை இங்கே காணலாம் -> அமெரிக்க போலிஸ் செய்தால் கொடுமை! இந்தியப் போலிஸ் செய்தால் சேவை!!.

India takes up matter of diplomat’s daughter with US
New Delhi/Washington, May 26 (IANS) The Indian government has taken ‘very seriously’ the matter of a diplomat’s daughter being illegally arrested in New York, even as the US administration claimed that family members of diplomats do not enjoy immunity.

இப்போது இந்தியாவில் நடந்திருக்கும் பின்வரும் சம்பவத்திற்கு என்ன இழப்பீடு கொடுக்கமுடியும்? யார் கொடுப்பார்கள்? அப்படியே இழப்பீடு கொடுத்தாலும் இந்த இழப்பினை ஈடுகட்ட முடியுமா? குறைந்த பட்சம் அரசாங்கம் வருத்தமாவது அடையுமா?

இது ஒன்றுமட்டுமல்ல. பல சம்பவங்கள் இப்படி தினமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அப்பாவிகள் கையில் சிக்கினால் போதும். அவ்வளவுதான் காவலுக்கும் நீதிக்கும் ஒரே கொண்டாட்டம்தான். இந்தியாவில் போலிஸ் எது செய்தாலும் அது சேவையாகத்தான் கருதப்படும் போலிருக்கிறது!!.



ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 12, 2011 மாலை மலர்

லக்கிம்பூர், ஜூன். 12-

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் நிகாசன் பகுதியில் போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலைய வளாகத்தில் நிர்வாக வசதிக்காக புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் காவலாளி ஒருவர் வேலை பார்த்து வருகிறார். அவரது 14 வயது மகள் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்காக அந்த கட்டிடத்தின் பகுதிக்கு சென்றார். மாலை சென்ற அவர் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை.

இது குறித்து அந்த சிறுமியின் தாயார் போலீசில் புகார் செய்தார். இதற்கிடையே அந்த சிறுமி போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார் போலீஸ் விசாரணையில் அந்த சிறுமியை கற்பழித்து கொன்று பிணத்தை மரத்தில் தொங்க விட்டது தெரிய வந்தது.

இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.கே.ராய் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த 2 சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 11 போலீசாரை அவர் சஸ்பெண்டு செய்துள்ளார். இது தொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து போலீஸ் நிலையம் முன்பு சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.க்கள் உஸ்மானி, பிடுஷ்ண கோபால் பட்டேல் ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

குற்றவாளியான போலீசாரை ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும், தனி நபர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி வலியுறுத்தி உள்ளது.


பெண்ணுக்குக் கிடைத்திருக்கும் தன்னாட்சியின் முதல்படி

அன்றைய தமிழ்நாட்டில் வேலு நாச்சியார் போன்ற பெருமை மிக்க பெண்கள் வாழ்ந்து பெண்மைக்கு பெருமை சேர்த்தார்கள்.....


இந்திய விடுதலைப் போர் வரலாற்றில் (1730) வெள்ளையர்களை ஓட ஓட விரட்டியடித்த வீரத்தாய் வேலு நாச்சியாரின் வரலாற்று நாட்டிய நாடகம், பரதாஸ்ரம் அமைப்பின் சார்பில் சென்னையில் நடந்தது. இதில் நடன கலைஞர்களின் முக்கிய காட்சிகள் பார்பதற்கு தத்ரூபமாக இருந்தது. (நன்றி- தினமலர் செய்திப் படம்)

சுதந்திரத்திற்கு முன்பான காலத்தில் வேலுநாச்சியார், தில்லையாடி வள்ளியம்மை, இராணி மங்கம்மாள் போன்ற பெண்களால் பெருமை அடைந்தது பெண்மை. அவர்கள் வாழ்ந்த இதே தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்குப் பின் பல ஆண்டுகளுக்குப் பிறகு பெண்களின் நிலை இதுதானோ?

(நன்றி தினமலர் கருத்துப்படம்)
ஆண்கள்தான் குடித்துக் கெடுகிறார்கள் நீங்களும் ஏன் குடிக்கிறீர்கள் என்று சொன்னால் பெண்ணுரிமைத் தலைவிகளுக்கு கோபம் வந்துவிடும். ஏன் ஆண் மட்டும்தான் குடிக்கவேண்டுமா? பெண்கள் குடித்தால் தவறா? பெண் என்ன அடிமையா என்று வெகுண்டு எழுவார்கள்.

அதனால் ஆணுக்கு நிகராக பெண்ணும் மதுசாலைக்கு வந்துவிட்டாள். ஆகா! பெண்ணுக்கு ஆனந்த சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று மகிழ்ந்து பெண்ணுரிமை பேசுவோர்களின் மனங்களை மகிழ்விப்போம்!
இதுவே பெண்ணுக்கு கிடைத்திருக்கும் தன்னாட்சியின் (Women Empowerment) முதல்படி என்றுகூட சொல்லாம்.


Wednesday, June 08, 2011

சப்தமில்லாமல் சமுதாயத்தில் நடக்கும் பெண்கொடுமை


கடும் அவதி...! பேரூர் பகுதி மக்களுக்கான "ஜமாபந்தி', கோவை தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அலுவலகத்துக்குள் இருந்தவாறு அதிகாரிகள் மனுக்களை பெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், வெளியே கொளுத்திய வெயிலில் நிற்க முடியாமல் நீண்ட நேரம் அவதிப்பட்டனர் பெண்கள். இவர்களுக்காக ஒரு டென்ட் அமைத்து, அமர இருக்கைகளும் வழங்கினால் என்னவாம்? (தினமலர் செய்திப்படம்)
======
இது என்ன மாமியார் கொடுமையா? அல்லது கணவன் செய்யும் கொடுமையா?
எல்லாத் தரப்பு பெண்களுக்கும் நடந்துகொண்டிருக்கும் இந்தக் கொடுமைகளை எந்தவகையில் சேர்ப்பார்கள்?

இதுபோல பல கொடுமைகள் பலவகைகளில் தினம் தினம் பெண்களுக்கு எதிராக நடந்துகொண்டுதான் இருக்கிறது. இவைகளுக்கு எதிராக பெண் விடுதலை விரும்பிகள் யாருமே குரல் கொடுப்பதில்லையே! ஏன்?


Thursday, June 02, 2011

நீதி எங்கே கிடைக்கும்?

காவல் நிலையத்தில் புகார் மனு ஏற்கவில்லை என கூறி சேலம் கலெக்டர் அலுவலகம் முன், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சேலம் சின்னத்திருப்பதியைச் சேர்ந்த மகாலெட்சுமி.
(தினமலர் கருத்துப்படம் 2 ஜுன் 2011)


“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.