இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, March 22, 2012

மருமகள்களே தமிழக முதல்வரின் அறிவுரையைக் கேளுங்கள்

மருமகள்களின் தவறான பாதையால் பொய் வரதட்சணை வழக்குகள் மூலம் இந்தியாவில் குடும்பங்கள் சிதைந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழக முதல்வர் புது மணத் தம்பதிகளுக்கு சரியான அறிவுரை வழங்கியிருக்கிறார்.

திருமணமாகி மாமியார் வீட்டிற்குச் செல்லும் மருமகள் கணவனின் குடும்பத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பயன்படுத்தும் அரசாங்க ஆயுதம்தான் பொய் வரதட்சணை வழக்குகள். இதில் வயதான மாமியார்களை குறிவைத்து தாக்கும் வழக்கம் பல காலமாக இருந்து வருகிறது. இந்த வயதான தாய்மார்களை அரசாங்கமோ, காவல்துறையோ, நீதிமன்றங்களோ ஒரு பெண்ணாகவே மதிப்பதில்லை. இளம் மருமகள் சொல்வதை மட்டும்தான் காதில் வாங்குவார்கள். அதன்படி வயதான மாமியாரை கைது செய்து சிறையில் அடைப்பார்கள். கேட்டால் பெண்கள் பாதுகாப்பு சட்டம் என்பார்கள்.

இதுபோன்ற அவலங்கள் நாட்டில் நடந்துகொண்டிருக்கும் சூழலில் தமிழக முதல்வரின் அறிவுரை அனைத்து மருமகள்களுக்கும் தேவை.


அன்பை செலுத்தினால் வாழ்க்கை சிறக்கும் :ஜெ., அறிவுரை
தினமலர் மார்ச் 21,2012


சென்னை:""ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்தாமல், அன்பை செலுத்தினால் வாழ்க்கை சிறக்கும். கணவன், மனைவி இருவரும் சமம் என்ற கோட்பாட்டை புரிந்து கொண்டு நடந்தால் இல்லறம், நல்லறமாக அமையும்,'' என, முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

சென்னை வானகரத்தில் அ.தி.மு.க., தேர்தல் பிரிவு செயலர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.,வின் மகன் அக்னீஷ் முகுன்தன் - ரேவதி அம்பாலிகா உட்பட அக்கட்சி நிர்வாகிகள் ஏழு பேரின் இல்ல திருமணங்களை நடத்தி வைத்து, மணமக்களுக்கு பரிசுகளை வழங்கி, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:உலக அதிசயம், வானவில் நிறம், வள்ளல்கள், சுரங்கங்கள் அனைத்தும் ஏழு என்பதை போல, இன்றைக்கு ஏழு ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று மங்கள திருநாள் மட்டுமல்ல, நமக்கெல்லாம் இது வெற்றி திருநாளாகவும் அமைந்துள்ளது. சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் நாம் அமோக வெற்றி பெற்றிருக்கிறோம்.இந்த புதுமண தம்பதிகளின் ஆரம்பமே வெற்றியில் துவங்கியிருக்கிறது. மணமக்கள் ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்தாமல், அன்பை செலுத்தினால் வாழ்க்கை சிறப்பாக அமையும். அன்பும், பாசமும் இருக்கும் இடத்தில் தான் அமைதியும், ஆனந்தமும் தவழும். ஒருவர் மீது ஒருவர் அதிகாரம் செலுத்தாமல், இருவரும் சமம் என்ற கோட்பாட்டை பின்பற்றி நடந்தால் இல்லம் நல்லறமாக அமையும்.

இல்லாள், மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம் துவங்கி நம் மூதாதையர்கள் சொல்லி வைத்து சென்றுள்ளனர். இல்லத்தை பராமரிப்பது முதல் பிள்ளைகளுக்கு திருமணம் செய்வது வரை மனைவியின் பங்கு மிகப் பெரியது. அதேபோல் குடும்பத்திற்காக பொருள் ஈட்டும் கணவனின் பங்கும் அளப்பரியது.ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் அனைத்தையும் சாதிக்க வேண்டும். இருவரும் உயர்வு தாழ்வு கொள்ளாமல் புரிந்து கொண்டு நடக்க வேண்டும். இத்தகைய புரிதலை தன்னகத்தே கொண்டு, புதுமண தம்பதிகள் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும்.

முதல்வர் சொன்ன குட்டி கதை:ஏழை விவசாயி ஒருவர் இருந்தார். ஒரு நாள் அவரை எழுப்பிய கடவுள், "நான் உன்னை விட்டு போகலாம் என முடிவு செய்துள்ளேன். உனக்கு என்ன வேண்டுமோ கேள்' என்றார். திடீரென கடவுள் எழுப்பி கேட்டதால், விவசாயி என்ன சொல்வது என தெரியாமல் விழித்தார். அதற்கு கடவுள், "ஒரு நாள் யோசித்து நாளை சொல்' எனக் கூறி மறைந்தார்.

பதறியடித்து எழுந்த விவசாயி, தன் குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மனைவி, 'இப்போதிருக்கும் சொத்தைவிட இன்னொரு மடங்கு வேண்டும்' என்று கேளுங்கள்' என்றார். மகள், "உடுக்க துணி, உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு வசதி வாய்ப்புகள் எப்போதும் வேண்டும் என கேளுங்கள்' என்றார்.மகன், "தரித்திரம் இல்லாத சுகமான வாழ்க்கை வேண்டும் என ஒரே வரமாக கேட்டு பெறுங்கள்' என்றார். ஆனால், விவசாயியின் தாய், "குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் அனைவரும் அன்பாய், பிரியமாய் எப்போதும் இருக்க வேண்டும் என கேள்' என்றார்.

தாய் சொன்னபடி கடவுளிடம் விவசாயி கேட்டார். அதற்கு கடவுள், "அப்படியானால் நானும் என் முடிவை மாற்றி விடுகிறேன். அன்பும், பாசமும் இருக்கும் இடத்தில் தான் நான் இருக்க ஆசைப்படுவேன். சண்டை, சச்சரவுகள் இல்லாத இடம் தான் நான் வாழுகின்ற இடம். இனி உன்னோடு நான் இருப்பேன்' எனக்கூறி மறைந்தார். எனவே, அன்பும், பாசமும் இருக்கும் இடத்தில் தான் இறைவன் இருப்பார் என்பதை உணர்ந்து புது மண தம்பதிகள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

Wednesday, March 21, 2012

காதலை தன் வழிக்குக் கொண்டுவர விசித்திரமான “அறுவை சிகிச்சை”

கணவனை தன் வழிக்குக் கொண்டுவர “இந்திய பொய் வரதட்சணை வழக்குகள்” மருமகள்களுக்கு உதவுகின்றன என்பது உலகறிந்த உண்மை. ஆனால் “கள்ள” காதலை தன் வழிக்குக் கொண்டுவர இப்படி ஒரு அறுவை சிகிச்சை இருப்பது இப்போதுதான் தெரிகிறது. எது நடந்தாலும் சரி எந்தவகையிலாவது தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற மருமகள்களின் ஆணவ குணத்தால்தான் பல பொய் வரதட்சணை வழக்குகள் இன்று நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கின்றன. அந்த வரிசையில் இப்படி ஒரு புதுமையை புகுத்தியிருக்கிறார் இந்த மருமகள்.


மதுரை: திருப்புத்தூர் அருகே, திருமணம் செய்ய மறுத்த காதலனின், மர்ம உறுப்பை, "நறுக்'கிய கள்ளக் காதலியிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம், வயல்சேரியை சேர்ந்தவர் மாரி, 29, கொத்தனார். சிவகங்கையில் கட்டுமானப் பணியில் இருந்தபோது, திருப்புத்தூர், கருவேப்பலம்பட்டி சுப்ரமணியன் மனைவி அமுதவல்லி, 35, சித்தாளாக வேலை பார்த்தார். மூன்று குழந்தைகள் உள்ளனர். மாரிக்கும், அமுதவல்லிக்கும் தொடர்பு ஏற்பட்டது. கள்ளத் தொடர்பை அறிந்த கணவர் சுப்ரமணியன், அமுதவல்லியை பிரிந்தார். தனிமையில் வாடிய தன்னை, திருமணம் செய்யும்படி, மாரியை வற்புறுத்தினார் அமுதவல்லி. அதற்கு மறுத்தார் மாரி.

நேற்று முன்தினம் இரவு, மாரி வீட்டிற்கு சென்ற அமுதவல்லி, அவரிடம் தகராறு செய்தார். வீட்டில் இருந்தவர்கள் அவரை சமாதானம் செய்து, ஊருக்கு அனுப்பினர். தன்னை பஸ் ஏற்றி அனுப்பி வைக்கும்படி கூறிய அமுதவல்லி, மதுரை மாட்டுத்தாவணிக்கு மாரியை அழைத்து வந்தார். நீண்ட நேரமாகி விட்டதால், இருவரும் அமுதவல்லியின் ஊருக்கு திரும்பினர். அங்குள்ள கண்மாய் கரையில் தூங்கினர். திடீரென மாரியின் மர்ம உறுப்பு, "நறுக்'கப்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் "நறுக்'கிய உறுப்புடன் மாரியை, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார் அமுதவல்லி. அங்கு அவருக்கு, மர்ம உறுப்பை பொருத்துவதற்கான அறுவை சிகிச்சை நடந்தது. மாரி போலீசில் கூறியபோது, ""அமுதாவுடன் மேலும் இருவர் இருந்தனர். இருட்டில் என்ன நடந்ததென்றே தெரியவில்லை'' என்றார். போலீசார், அமுதாவிடம் விசாரித்து வருகின்றனர்.

Wednesday, March 14, 2012

இரண்டாவது கணவனை தேடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

விதவைத் திருமணத்தை ஆதரிப்போம் அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் யாருக்கும் இல்லை. ஆனால் அதே வேளையில் பொய் வரதட்சணை வழக்கு மூலம் குடும்பத்தை சிதைத்துக்கொண்டு பிறகு மீண்டும இரண்டாவது கணவனை தேடுபவர்களின் எண்ணிக்கைதான் அதிகரித்துக் கொண்டிருக்கிறதோ?

Widows, divorcees break taboo in Tamil Nadu - The Times of India
timesofindia.indiatimes.com

CHENNAI: A quiet revolution is sweeping across socially conservative Tamil Nadu. The state is witnessing an increase in remarriages of widowed and divorced women. Society also appears to have become more tolerant of what was once considered taboo.

People in the matrimonial industry said urbanization, financial independence of women and changing cultural values have been the primary drivers of the change. The trend started around 10 years ago and has been growing over the past decade, people said.

Murugavel Janakiraman, founder and CEO of Consim Info, the company behind bharatmatrimony, said there has been a change in the mindset of parents of widows and family members. "Parents themselves are hunting for suitable bridegrooms for daughters who have been widowed early in marriage," he said.

Remarriage of widows has been promoted in Tamil Nadu for a long time, with the state government extending financial assistance of Rs 20,000 through the Dr Dharmambal Ammaiyar Ninaivu Widow Remarriage Assistance Scheme. The scheme was launched in 1975 to rehabilitate widows and encourage them to remarry. But most remarried women do not apply for assistance under the scheme, social welfare department officials point out. "Only 167 women received assistance from the government under the scheme in 2008-2009 and 181 women in 2009-2010," a senior official said.

Young widows have welcomed the development. "My first husband died in an accident when I was 27 years old. After a couple of years I agreed to remarry. Life is good now. I married a man who was happy to accept me with my five-yearold daughter. We are leading a meaningful family life now. I hope this change is here to stay," said K Rohini, corporate company employee.

Janakiraman said the number of profiles registered on bharatmatrimony's site for remarriage launched three years ago has been increasing by 20 per cent to 30 per cent annually. "Many of the women who have registered on the site are divorcees but there are also around 10,000 widows," he said. "Chennai has the third highest number of remarriages after Mumbai and Bangalore, and Coimbatore is also among the top 10." The average age of those who marry again is 36 for men and 32 for women.

S Priya, who operates a matrimonial centre especially for remarriage, said only few hundred women registered when she started the centre. "Now we have more than 1 lakh profiles," she said.

B Radha, gender and media researcher and professor at Tirunelveli-based Manonmaniam Sundaranar University, pointed out that rural Tamil Nadu has not changed much.


Saturday, March 10, 2012

தானாக சரணடைந்த நேர்மையான கணவர்!

தாண்டிக்குடி:கொடைக்கானல் மலைப்பகுதி தாண்டிக்குடி அருகே பட்லாங்காட்டை சேர்ந்தவர் வேல்முருகன், 39. இவரது வீட்டருகே, மங்களம்கொம்பை சேர்ந்த கணேசன், 42, குத்தகைக்கு விவசாயம் செய்துவந்தார். வேல்முருகன் மனைவி கவிதா, 25. இவருக்கும் கணேசனுக்கும் தொடர்பு இருந்துள்ளது. வேல்முருகன், மனைவியை எச்சரித்தும் தொடர்பு தொடர்ந்துள்ளது. நேற்று காலை 10 மணிக்கு தோட்டத்திற்கு வந்த கணேசன் வீட்டின் பின்புறமாக கவிதாவை அழைத்து பேசியுள்ளார்.

அங்குவந்த வேல்முருகன், ஆத்திரமடைந்து கவிதாவை அரிவாளால் வெட்டினார். கணேசன் தப்பியோடியபோது விரட்டிச்சென்று வெட்டினார். இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். வேல்முருகன், அரிவாளுடன் தாண்டிக்குடி போலீசில் சரணடைந்தார். இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் விசாரிக்கிறார்.கவிதாவிற்கு கோகிலா, 8, கோபாலகிருஷ்ணன், 3 என்ற குழந்தைகள் உள்ளனர். கணேசனுக்கு மனைவி சித்ரா, திருமணமாகும் நிலையில் மணிமேகலை, செல்லமணி என்ற இருமகள்கள் உள்ளனர்.

======

IPC497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

இந்திய கள்ளக்காம சட்டத்தின்படி தவறான உறவில் ஈடுபடும் மனைவியை தண்டிக்க சட்டத்தில் வழியே இல்லை. அதனால் கணவன் இந்த தவறை தட்டிக்கேட்டால் பெரும்பாலும் மனைவியின் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி சிறைக்குத்தான் செல்லவேண்டும் என்ற சூழ்நிலை நாட்டில் பல ஆண்டுகளாக நிலவிவருகிறது.

படித்து உயர் பதவியில் இருக்கும் மேல்தட்டு குடும்பங்களில் கணவன்கள் இதுபோன்ற மனைவியின் கள்ளக்காம பிரச்சனையை எப்படி கையாள்வது என்று தெரியாமல் கடைசியில் மனைவியின் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி ஜாமின் வாங்கிக்கொண்டு “கவுரமாக” உலவவுதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கிராமப்புறங்களில் இருக்கும் ஆண்கள் இந்திய கள்ளக் காம சட்டத்தைப் பற்றி தெரிந்தோ தெரியாமலோ தாங்களே நேரடியாக தங்களுக்குத் தேவையான நீதியை எடுத்துக் கொள்கிறார்கள். இதுதான் இந்திய கள்ளக்காம குடும்ப பிரச்சனைகளில் நாட்டில் இப்போது நடந்துகொண்டிருக்கும் அவலம்.


“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.