இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, December 13, 2013

கணவன் மனைவி தகராறா? இருபதாயிரம் ரூபாய் தயாராக வைத்திருங்கள்!!!!

குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் பிரச்சனை என்றாலே மகளிர் காவல்நிலையத்திற்கும், வழக்கறிஞர்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் ஒரே கொண்டாட்டம்தான் போலிருக்கிறது.

இளம் தம்பதிகளுக்கிடையே ஏற்படும் சிறு பிரச்சனைகளையும் பெரிதாக்கி பொய் வரதட்சணை வழக்குகள் மூலம் கொள்ளை லாபம் கண்டுவந்த மகளிர் காவல் நிலையங்களை கண்ட சென்னை உயர்நீதிமன்றம் குடும்ப பிரச்சனைகளை தீர்க்க தனியாக மாற்று சீறுடை அணிந்த குடும்பப் பிரச்சனைகளை தீர்க்கும் திறனுள்ள பயிற்சி பெற்ற அலுவலரை ஒவ்வொரு மகளிர் காவல்நிலையத்திலும் நியமிக்க வேண்டும் என்று 2008ல் உத்தரவிட்டது ஆனால் அந்த உத்தரவை கழிவறை காகிதம்போல் தூக்கி எறிந்துவிட்டு இன்றும் கொட்டம் அடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.  
 
பின்வரும் செய்தியை படித்துவிட்டு  உங்கள் பாக்கெட்டில் எப்போதும் ரூபாய் 25,000 க்கு குறையாமல் பணம் வைத்துக் கொள்ளுங்கள்.  உங்கள் குடும்பத்திலும் ஏதாவது பிரச்சனை வரும் அல்லவா?
 
 
சேலம்: பெண் விவசாயிடம், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, சேலம் மகளிர் எஸ்.ஐ., மற்றும் புரோக்கரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

சேலம், கோம்பக்காட்டை சேர்ந்தவர், இருசாயி, 40; விவசாய கூலி. இவரது கணவர் சுப்பிரமணி, இருசாயியுடன் தகராறு ஏற்பட்டு, முதல் மனைவி சரசுவுடன் வசித்து வந்தார். இருசாயிக்கு, அவரது சகோதரர்கள், செட்டிசாவடியில் ஒரு வீட்டை வாங்கி கொடுத்தனர். ஆனால், கோம்பக்காட்டிலேயே இருசாயி, தன் மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன், இருசாயி வீட்டுக்கு சென்ற சுப்பிரமணி, வீட்டு பத்திரத்தை கொடு என, மிரட்டினார். இதில் ஏற்பட்ட தகராறில், சுப்பிரமணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வழக்கு பதிந்த, கன்னங்குறிச்சி எஸ்.ஐ., மலர்விழி, இருவரையும் அழைத்து சமரசம் செய்துள்ளார். இதற்கிடையில், கன்னங்குறிச்சியை சேர்ந்த புரோக்கர் பாலு என்பவர் மூலம், இருசாயியை, எஸ்.ஐ., மலர்விழி அழைத்து, "வழக்கு சமரசம் ஆகவில்லை; இந்த வழக்கில் நீதிமன்றம் செல்ல வேண்டாமென்றால், 20 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டும்' என்றார். "நானோ ஏழை, என்னிடம் அவ்வளவு பணம் இல்லை' எனக் கூறிய இருசாயி, கடைசியில், 10 ஆயிரம் ரூபாய் தருவதாக, ஒப்புக் கொண்டார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில், இருசாயி புகார் கூறினார். நேற்று மதியம், கன்னங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் வெளியே நின்றிருந்த புரோக்கர் பாலுவுடன் சென்ற இருசாயி, எஸ்.ஐ., மலர்விழியிடம், 10 ஆயிரம் ரூபாயை கொடுத்தார். பணத்தை வாங்கிய மலர்விழி, 1,500 ரூபாயை புரோக்கர் பாலுவிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Thursday, August 01, 2013

கணவன் விவாகரத்து கோரினால் சமூக சீரழிவும், மனைவி விவாகரத்து கோரினால் சமுதாயத்தில் செல்வச் செழிப்பும் ஏற்படும்!

இந்தியத் திருமணங்களில் சிக்கல் ஏற்படுவது இப்போது சர்வ சாதாரணமாக நடக்கும் விஷயம்.  அதிலும் குறிப்பாக பெண்ணுரிமை என்ற பெயரில் உருவாகிக் கொண்டிருக்கும் பல சட்டங்கள் குடும்பங்களை சீரழித்து குடும்பம் குடும்பமாக நீதிமன்றங்களில் விவாகரத்திற்காக வரிசையில் நிற்க வைத்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. 

இதுபோன்ற சூழலில் பல வித குடும்ப அழிப்பு  சட்டங்கள் சப்தமில்லாமல் நிறைவேற்றப்பட்டு சந்தைக்கு வியாபாரத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன.  இதில் சிறப்பு என்னவென்றால் மனைவி நடத்தை கெட்டவளாக இருந்தாலும் அல்லது கணவனின் குடும்பத்தை பொய் வழக்குப் போட்டு சீரழித்தாலும் கணவன் விவாகரத்து கேட்டால் இந்த ஜென்மத்தில் கணவனுக்கு விவாகரத்து கிடைக்காது. 

ஆனால் மனைவி கள்ளக்காதலனோடு சல்லாபம் செய்வதை கணவன் கண்டித்தால் அது பிடிக்காத மனைவி அவன் மீது பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்துவிட்டு நீதிமன்றத்தை அணுகி கணவன் கொடுமை செய்வதாகக் கூறி விவாகரத்தை எளிதாக பெற்றுக் கொண்டு கைச் செலவிற்கு ரொக்கப் பணத்தையும் எளிதாக வாங்கிச் செல்லலாம்.  இதுதான் இன்றைய நிலவரம்.  அதனால்  கணவன் விவாகரத்துக் கோரினால் அது சமூக இழுக்கு, மனைவி விவாகரத்து கோரினால் அது சமுதாயத்தின் செல்வச் செழிப்பு என்று சொல்லலாம் அல்லவா?

மனைவி பொய் வழக்குப் போட்டு கணவனின் தாய்  மற்றும் சகோதரிகளை சிறையில் அடைத்தாலும் அது குடும்பத்திற்கோ சமுதாயத்திற்கோ இழுக்கு கிடையாது.  அதனால் கணவன் கோரும் விவாகரத்து கொடுக்க முடியாது,  அவன் அந்த மனைவியுடன்தான் வாழ்ந்தாக வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின்  தீர்ப்பை பாருங்கள்.  இதை படித்துவிட்டு மதுரை கிளை நீதிமன்றத்தின் செய்தியை தொடர்ந்து படியுங்கள். 
High Court of Judicature at Madras
23-12-2011
Judge(s)

JUSTICE K. MOHAN RAM & JUSTICE G.M. AKBAR ALI
Parties
P. Abirami Versus D.E. Tamilarasan
Advocate(s)
For the Appellant: D. Ramalingam for Sudha Ramalingam, Advocates.
For the Respondent: M. Venkatachalapathy, Senior Counsel for M. Kempraj, Advocate.
Hindu Marriage Act, 1955 (25 of 1955), Section 13 – Mental Cruelty – Decree of divorce – Grant of - Validity of – Decree of divorce granted in favour of husband by Trial Court on account of mental cruelty – However, no specific acts, which amounted to mental cruelty, have been pleaded with material particulars – Only general allegations made in petition for divorce – Allegation that wife did not behave as a dutiful wife also not substantiated – Moreover, allegations that husband was not informed about pregnancy of wife also proved to be false – Acquittal of mother and sister in Criminal case filed by wife would not prove that Complaint being falseThus, allegation of mental cruelty not established – Decree of divorce granted on ground of mental cruelty, set aside.



மதுரை : "விவாகரத்து, கேட்டதும் கிடைக்கும் பொருள் அல்ல. விவாகரத்து மீதான பாதிப்பின் தாக்கம், பெண்கள் மீது அதிகம் இருக்கும்; சமூகத்தில் களங்கம் ஏற்படுத்தும்; அப்பாவி குழந்தைகளை பாதிக்கும்' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மதுரை, கோரிப்பாளையம் சரவணகுமார், "என் மனைவி பரமேஸ்வரி கொடுமைப்படுத்துகிறார். அவரது தாய் வீட்டில் உள்ளார். 1 லட்சம் ரூபாய் வாங்கி, ஒருமித்த விவாகரத்துக்கு ஒப்புக் கொண்டார். விவாகரத்து வழங்க வேண்டும்' என, குடும்பநல கோர்ட்டில் மனு செய்தார். பரமேஸ்வரி, "சரவணகுமாரின் நடவடிக்கைகள் சரியில்லை. ஒருமித்த விவாகரத்திற்கு நான் சம்மதிக்கவில்லை. என்னை ஏமாற்றி, கையெழுத்து வாங்கினார். இதற்கு வரதட்சணை பிரச்னை தான் காரணம்' என, மனு செய்தார்.
சரவணகுமாரின் மனுவை, குடும்பநல கோர்ட், 2010ல் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து அவர், ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்தார்.

நீதிபதி, என்.பால்வசந்தகுமார், பி.தேவதாஸ், "பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: விவாகரத்து, கேட்டவுடன் கிடைக்கும் பொருள் அல்ல. விவாகரத்து மீதான பாதிப்பின் தாக்கம், பெண்கள் மீது அதிகம் இருக்கும்; சமூகத்தில் களங்கம் ஏற்படுத்தும்; அப்பாவி குழந்தைகளை பாதிக்கும். விவாகரத்து வழங்க என, தனி விதிகள் உள்ளன. அதை மீற முடியாது. உடல் ரீதியாக அல்லாமல், மன ரீதியாக மனைவி கொடுமைப் படுத்தியதாக, மனுதாரர் கூறுகிறார். சிறு, சிறு சச்சரவுகளை கொடுமையாக கருத முடியாது. சாட்சிகளை பார்க்கும் போது, மனுதாரர் சாதாரண விஷயத்தை ஊதி, பூதாகரமாக்கி உள்ளார். கொடுமைப் படுத்தியதற்கான நிகழ்வுகளை, ஆதாரபூர்வமாக தெரிவிக்கவில்லை. மனுதாரர், ஏற்கனவே ஒரு பெண்ணை மணந்து, விவாகரத்து செய்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். தண்ணீர் பருக விருப்பமில்லாத குதிரையை, கட்டாயப்படுத்தி பருக வைக்க முடியாது. ஒருமித்த முறையில் விவாகரத்து செய்தாலும், சில காலம் காத்திருக்க வேண்டும். ஒருமித்த விவாகரத்திற்கு சம்மதம் பெற, மனுதாரர், செல்வாக்கை பயன்படுத்தி இருக்கக் கூடாது. இதில் மனுதாரர், மனைவியை ஏமாற்றி கையெழுத்து வாங்கியுள்ளார். மனைவியின் குற்றச்சாட்டை, மனுதாரர் மறுக்கவில்லை. குடும்ப நல கோர்ட் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Monday, July 22, 2013

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடமாக மாறிவிட்ட நீதிமன்றங்கள் - பெண் வழக்கறிஞர்கள் குமுறல்

பெண்கள் மற்றும் குழந்தைகளின் வழக்குகளுக்கு முன்னுரிமை தருவோம் என்று இந்தியத் தலைமை நீதிபதி கூறிவரும் நிலையில் சட்டம் படித்த பெண் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தங்களுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதாக தலைமைநீதிபதிக்கு கடிதம் அனுப்பியிருப்பது இந்திய நீதித்துறையின் பாதுகாப்பற்ற நிலையை காட்டுகிறது.   சட்டம் படித்த பெண்களுக்கே இந்தநிலை என்றால் சாதாரண பெண்களின் நிலை எப்படி இருக்கும் இந்த நாட்டில்?

இதில் கவனிக்கப்படவேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் குடும்பப் பிரச்சனையை தீர்த்துக்கொள்ள நீதிமன்றத்திற்கு சென்றதால் பல ஆண்டுகளாக வழக்கை நடத்தாமல் நீட்டித்துக்கொண்டிருக்கும் நீதிமன்றத்தின் பிடியில்  சிக்கியிருக்கும் கணவனும் மனைவியும் விரைவில் விடுபடவேண்டும் என்று சனி ஞாயிறு நாட்களில் வழக்கை நடத்தலாம் என்றால் அதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். 

குடும்பநல நீதிமன்றங்கள் கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள பிரச்சனையை தீர்த்துவைக்க முன்னுரிமை கொடுத்து ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் இன்று  வழக்கறிஞர்கள் அதனையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள்.  இது எங்கு போய் முடியுமோ?

ஐகோர்ட் நீதிபதி பணியிடங்களில்பெண்களுக்கு 33 சதவீதம் கோரிக்கை
 ஜூலை 22,2013 தினமலர்
சென்னை:ஐகோர்ட் நீதிபதிகள் பணியிடங்களில், பெண் வழக்கறிஞர்களுக்கு, 33 சதவீத ஒதுக்கீடு கோரி, புதிய தலைமை நீதிபதிக்கு, பெண் வழக்கறிஞர்கள் சங்கம், கடிதம் அனுப்பியுள்ளது.

சுப்ரீம் கோர்ட் புதிய தலைமை நீதிபதியாக, தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம் பொறுப்பேற்று உள்ளார். சென்னை ஐகோர்ட்டில், தற்போது, 17 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஏற்கனவே, நீதிபதிகள் பணியிடங்களுக்கு, 15 பேர் பரிந்துரைக்கப்பட்டு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.இந்நிலையில், புதிய தலைமை நீதிபதிக்கு, சென்னையில் உள்ள, பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவி பிரசன்னா, துணைத் தலைவி நளினி, செயலர் மஞ்சுளா தேவி ஆகியோர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஐகோர்ட் நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பும்போது, பெண்களுக்கான, 33 சதவீத ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும். தற்போது ஐகோர்ட்டில், பெண் நீதிபதிகள், ஏழு பேர் உள்ளனர். இவர்களில், இரண்டு பேர், வழக்கறிஞராக இருந்து, ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்கள். மீதி, ஐந்து பேர், கீழமை கோர்ட்டுகளில் இருந்து, பதவி உயர்வு மூலம், ஐகோர்ட் நீதிபதியாக ஆனவர்கள். நீதிபதிகள் பணியிடங்கள், வழக்கறிஞர்கள் மத்தியில் இருந்து, 60 சதவீதம், நீதித் துறையில் இருந்து, 40 சதவீதம் (கீழமை கோர்ட்டுகளில் நீதிபதிகளாக பணியாற்றுவோர்) என்கிற அடிப்படையில் நிரப்பப்படுகிறது.

எனவே, நீதிபதிகள் பணியிடங்களில், பெண் வழக்கறிஞர்களுக்கு, 33 சதவீத அடிப்படையில் நிரப்ப வேண்டும். சனி, ஞாயிறு கிழமைகளில் செயல்படும், விடுமுறை கால குடும்ப நல கோர்ட்டுகளுக்கு, எதிர்ப்பு தெரிவிக்கிறோம். அன்றைய நாட்களில், கட்சிக்காரர்களை சந்திக்க முடியும்.மேலும், விடுமுறை நாட்களில் கோர்ட்டுக்கு வருவதில், பாதுகாப்புப் பிரச்னையும் அடங்கிஉள்ளது. எனவே, விடுமுறை நாட்களுக்குப் பதில், கூடுதலாக, குடும்ப நல கோர்ட்டுகளை திறக்க வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.


Thursday, July 11, 2013

காதலித்த ஆணை எப்படி முறைப்படி திருமணம் செய்வது என்று தெரியுமா?

பெண்கள் ஆணின் அழகிலோ, பணத்திலோ மயங்கி மனதை பறிகொடுத்து பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்யும்போது பல சமுதாய சிக்கல்களை சந்திக்கவேண்டியிருக்கிறது.  இது பெண்ணடிமைத் தனத்தினால் புதுமையை விரும்பும் இளம் பெண்களுக்கு ஏற்படும் கொடுமை. மும்பையில் ஒரு புதுமைப் பெண் தான் விரும்பிய ஆணை திருமணம் செய்ய நேர்வழியில் சென்று  நீதிமன்றத்தில் கண்ணியமாக ஆதரவு கேட்டிருக்கிறார்.  இவரது கள்ளங்கபடம் இல்லாத அணுகுமுறையை  எப்படிப் பாராட்டுவது என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்!

ஜூலை 11,2013

மும்பை : திருமணமான போலீஸ்காரரை காதலித்து, அவரை, சட்டப்படி திருமணம் செய்ய அனுமதி கோரிய பெண்ணின் மனுவை, மும்பை ஐகோர்ட், தள்ளுபடி செய்தது.

மும்பையை சேர்ந்த பெண் மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு:பிரசாத் மர்தே என்ற போலீஸ்காரரை, பல ஆண்டுகளாக, உயிருக்கு உயிராக காதலிக்கிறேன். அவரை, கணவனாக பாவித்து, கனவு காண்கிறேன். முறைப்படி, அவரை திருமணம் செய்து, அவர் மனைவியாக வேண்டும் என, ஆசைப்படுகிறேன்.இதற்காக, 14 ஆண்டுகளாக காத்திருக்கிறேன். அவருக்கு, ஏற்கனவே திருமணமாகி, மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். எனவே, அவரை, திருமணம் செய்ய, சட்டப்பூர்வமாக அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில், அந்த பெண் கூறியிருந்தார்.

இந்த மனு, மும்பை ஐகோர்ட் தலைமை நீதிபதி, மொகித் ஷா மற்றும் நீதிபதி சாதனா ஜாதவ் ஆகியோர் அடங்கிய, "பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:போலீஸ்காரர் பிரசாந்த் முர்தேவுக்கு, ஏற்கனவே திருமணமாகி விட்டது. அவருக்கு, இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அவர்களின் வாழ்க்கை, இனிமையாகவும், அமைதியாகவும் செல்கிறது.இந்த சூழ்நிலையில், உங்களின் மனுவை ஏற்றால், அது, அவர்களின் இனிமையான வாழ்க்கையை, சீர்குலைத்து விடும்.இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த பெண்ணின் மனுவை, தள்ளுபடி செய்தனர்.

Friday, June 28, 2013

வரதட்சணை வழக்கில் பெண் போலிஸ் இன்ஸ்பெக்டர் அடித்த லூட்டி!!

இந்தியாவில் திருமணம் செய்யும் இளைஞர்கள்  பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி சிறைக்குச் சென்று அவர்களது குடும்பம் நாசமாக வேண்டும்  என்பது எழுதப்படாத இந்திய  சட்டம்  என்று அனைவருக்கும் தெரியும்.   பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி வேதனைப்படும் குடும்பங்களில் பிணந்திண்ணி கழுகு போலமுடிந்தவரை பிடுங்கித்தின்று பல காவல்- மற்றும் சட்டக்-குடும்பங்கள் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதும் அவரவர் மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும்.

பிணத்தை உண்டு வாழும் கழுகிற்கும், ஓநாய்களுக்கும் அது திண்ணும் பிணம் நல்லவனின் உடலா அல்லது கெட்டவனின் உடலா என்று தெரியுமா? அல்லது அது என்றாவது அது பற்றி யோசித்திருக்குமா?   எது கிடைத்தாலும் திண்ணும்.  அதுபோலத்தான் வரதட்சணை வழக்கு என்றால் அது உண்மையான வழக்கா அல்லது பொய் வழக்கா என்று சற்றும் கவலைப் படாமல் புகார் கொடுத்தவர், குற்றம் சாட்டப்பட்டவர் என இரு தரப்பிலும் பணத்தை பிடுங்கலாம் என்று வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன காவலும் நீதியும்.

இந்தியாவில் பொய் வரதட்சணை வழக்குகள் சமுதாயத்தை சீர் குலைத்து, ஊழலுக்கு வழி வகுத்து, மனித உரிமை மீறல்களை செய்யும் கருவியாக்கப்பட்டு காவல் மற்றும் நீதித்துறைகளை அப்பாவிகளை துன்புறுத்தி பணம் பிடுங்கும் பிணந்திண்ணிகளாகவே மாற்றிவிட்டன என்று அறிந்துகொள்ள  டில்லி நீதிமன்ற தீர்ப்பினையும் இன்றைய செய்தித்தாளில் வந்துள்ள செய்தியையும் ஒப்பிட்டால் தெள்ளத் தெளிவாக தெரியும்.
IN THE COURT OF Dr. KAMINI LAU: ADDL. SESSIONS

JUDGE-II (NORTH-WEST): ROHINI COURTS: DELHI

Criminal Revision No. 377/2010

Man Mohan Sharma ............ Petitioners/ Revisionists   Vs    State of NCT of Delhi............. Respondent

Dated: 25.2.2011



Lastly, I am compelled to observe that Section 498A IPC in the recent years has become consummate embodiment of gross human rights violation, extortion and corruption and even the Apex Court of our country had acknowledged this abuse and termed it as Legal Terrorism. The provisions of Section 498 A IPC are not a law to take revenge, seek recovery of dowry or to force a divorce but a penal provision to punish the wrong doers. The victims are often misguided into exaggerating the facts by adding those persons as accused who are un-connected with the harassment under a mistaken belief that by doing so they are making a strong case. Courts cannot be a party to any kind of exploitative situation and it is necessary for every complainant to remember that it is only an honest complaint which succeeds in law where contents are supported by facts on the ground and persons, who are not connected with the harassment, should never be arrayed as accused. The platform of the courts cannot be permitted to be used to wreck personal vendetta or unleash harassment and the tendency of the complainants to come out with inflated and exaggerated allegations by roping in each and every relation of the husband is required to be deprecated. The obligation of the court is to ensure that innocent persons are not put to harassment and to curtail the frivolous allegations at the earliest stage by looking for due corroboration from the facts. (Ref.:- Savitri Devi Vs. Ramesh Chand & Ors., CRL (R) 462/2002 decided on 30.5.2003); Criminal Appeal No. 339-41/05 datde 2.3.2010, Delhi High Court; Arjun Ram Vs. State of Jharkhand & Anr., 2004 CLJ 2989; Mukesh Rani Vs. State of Haryana, 2002 (1) RCR (Criminal) 163 and Anu Gill Vs. State & Anr., 2001 (2) JCC (Delhi) 86.

I may further add that in any matrimonial dispute, it is the primary duty of every court to ensure that for any fault of the husband, his other relatives including married sisters and brothers who may be living jointly or separately and the aged parents are not involved either out of vengeance or to curl out appropriate settlement.


திருச்சி: பாஸ்போர்ட் பிரச்னையை தீர்த்து வைப்பதாக, லஞ்சம் வாங்கிய, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி, திருவானைக்காவல், மாம்பழச்சாலையை சேர்ந்த வெங்கடேஷ் மீது, அவரது மனைவி, வரதட்சணை கேட்பதாக புகார் கொடுத்திருந்தார்.

இந்த புகாரில், அவரது உறவினர் ஜீவநாயகம் என்பவரின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. அதனால், அவரது பாஸ்போர்ட்டை, திருவெறும்பூர் மகளிர் போலீசார், முடக்கி வைத்திருந்தனர்.

மலேசியாவில், வேலைக்கு செல்லவிருந்த ஜீவநாயகத்துக்கு, இதனால் சிக்கல் ஏற்பட்டது. பாஸ்போர்ட் பிரச்னையை, தீர்க்க, புரோக்கர் கிறிஸ்டோபர் என்பவர் மூலம், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகாயினியிடம் பேச்சு நடந்தது.  இதற்கு, 35 ஆயிரம் ரூபாய், லஞ்சம் தர வேண்டும் என, கார்த்திகாயினி கேட்டுள்ளார். இறுதியாக, 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பது என, பேரத்தில் முடிவானது.

ஆனால், பணம் கொடுக்க விரும்பாததால், இது குறித்து, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில், புகார் செய்யப்பட்டது. போலீஸ் ஆலோசனைப்படி, நேற்று பிற்பகலில், பெண் போலீசாரிடம் பணம் கொடுக்கப்பட்டது. அப்போது, கார்த்திகாயினி, 38, புரோக்கர் கிறிஸ்டேபார், 55, ஆகியோரை, லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக கைது செய்தனர். திருச்சி மன்னார்புரம் அரசு குடியிருப்புப்பில் உள்ள, கார்த்திகாயினி வீட்டில், சோதனை நடத்தினர். பின்னர், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

கார்த்திகாயினியின் கணவர் கார்த்திகேயன், சேலம், அரசு மருத்துவமனை டீனாக உள்ளார்.

Tuesday, June 18, 2013

முடிவில்லா குழப்பத்தில் முடியப்போகும் இந்தியத் திருமணங்கள்!!!

குழப்ப நிலையில் இருக்கும் இந்தியாவைப் போலவே இந்திய சட்டங்களும் அவற்றை விளக்கும் நீதிமன்றங்களின் கருத்துக்களும் இருக்கின்றன என்பதற்கு பின்வரும் செய்தி நல்ல உதாரணம்.

பின்வரும் செய்தியில் சென்னை உயர்நீதிமன்றம் வயது வந்த ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபட்டால் கணவன் மனைவியாக கருதப்படுவர் என்றும் மத முறைப்படி திருமணம் நடத்துவது, திருமணத்தை பதிவு செய்வது  போன்றவை வெறும் வெற்றுச் சடங்குகள் என்று கூறியிருக்கிறது!!!  இந்த விளக்கத்தின் மூலம் பின்வரும் கேள்விகளுக்கு இப்போது பதில் தெரியவில்லை!!!
  1. வயது வந்த ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபட்டால் அவர்கள் கணவன் மனைவியாக கருதப்படும் என்றால் விபச்சாரத்தில் ஈடுபடும் ஆணும் பெண்ணும் கணவன் மனைவி என்று சட்டம் எடுத்துக் கொள்ளுமா? உறவில் ஈடுபட்ட பெண் திருமணம் செய்த மனைவியைப் போல வாடிக்கையாளர் மீது வரதட்சணை தடுப்புச் சட்டம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் போன்றவற்றை பய்ன்படுத்த முடியுமா? இல்லை உறவிற்கு பணம் பெற்றதால் அதை விபச்சாரமாகத்தான் கருதுமா?  அப்படியென்றால்..... பின்வரும் இரண்டாவது கேள்விக்கு என்ன பதில்?
  2. எல்லா சடங்குகளுடனும் திருமணம் செய்யும் இளம் பெண்கள் பலர் சில இரவுகள் கணவனுடன் கழித்துவிட்டு பிறகு பெருந்தொகையை  நஷ்ட ஈடாக கணவனிடம் கேட்டு குடும்ப வன்முறை சட்டத்தின் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார்கள்.  (இந்தப் பெண்கள் உயர் கல்வி கற்று நல்ல பணியில் இருக்கிறார்கள்.  கணவனின் பணம் இல்லாமல் சுயமாக வாழமுடியும்)  உறவுக்கு பணம் கேட்கும் இவர்களை சட்டம் விபச்சாரிகளாக கருதுமா?
  3. திருமணத்தை பதிவு செய்வது வெறும் சடங்கு என்று சென்னை உயர்நீதிமன்ற  தீர்ப்பு செய்தி சொல்கிறது.  ஆனால் இந்திய உச்ச நீதிமன்றம் இந்தியாவில் நடக்கும் அனைத்து திருமணங்களையும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது .  பதிவு செய்யாதவர்களுக்கு தண்டனையும் உண்டு என்று கூறியிருக்கிறது.  இப்போது எந்த நீதிமன்றம் சொல்வதை எடுத்துக்கொள்வது??

    The Hindu :  Register all marriages: Supreme Court www.hindu.com/2007/10/26/stories/2007102656810100.htm Oct 26, 2007 – NEW DELHI: The Supreme Court on Thursday ordered compulsory registration of marriages of couples belonging to all religions across the ...

  4. சரி இந்திய உச்ச நீதிமன்றம் சொல்லும் கட்டளையை பின்பற்றி திருமண பதிவு அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்ய ஆண் பெண் இருவரும் உறவு கொண்டதை அடிப்படையாக வைத்து  அதை “திருமணம்” என்று பதிவு செய்வார்களா?  பின்வரும் செய்தியில் தாலி கட்டுவது, மத சடங்குகளை நடத்துவது எல்லாம் ஒரு  வெற்று சடங்குதான் என்று சொல்லப்பட்டிருக்கிறது.  ஆனால் திருமண பதிவு சட்டம் அந்தந்த மத முறைப்படி திருமணம் நடந்திருந்தால்தான் அதை (சிறப்பு திருமணங்களைத் தவிர) குறிப்பிட்ட மதத் திருமணமாக பதிவு செய்யமுடியும் என்று கூறுகிறது.

    Proof for all these shall be given  for Hindu Marriage
    1 . MARRIAGE  Wedding Invitation (or)
    Temple Marriage Receipts (or)
    Any proof of marriage solemnization
    2. RESIDENCE ID Card (or)
    Ration Card (or)
    Driving License (or)
    Passport or Visa
    3. AGE Birth Certificate (or)
    School/College Certificate (or)
    Passport / Visa 
இப்போது எந்த விஷயம் சரி எது தவறு என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.  இந்தியாவில் தெளிவான சட்டங்கள் கிடையாது.  ஏமாந்தவனை தண்டிக்க வெள்ளையன் பயன்படுத்திய சட்டம் இன்றும் மக்களை குழப்பி அப்பாவிகளை தண்டிக்க மட்டுமே பயன்படுகிறது.

தாலி கட்டி, மாலை மாற்றி, அக்னி வலம் வந்தால் தான் திருமணமா?

 தினமலர் 18 ஜூன் 2013

சென்னை:"சட்டப்படியான வயது நிரம்பிய ஆணும், பெண்ணும், உடல் ரீதியாக தொடர்பு வைத்திருந்தால், அவர்கள், கணவன் - மனைவி என கருதப்படுவர்; அது, செல்லத்தக்க திருமணம்' என, சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

கோவையைச் சேர்ந்த, பாத்திமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு:எனக்கும், அன்வர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும், முஸ்லிம் வழக்கப்படி, 1994ம் ஆண்டு, திருமணம் நடந்தது. எங்களுக்கு, இரண்டு குழந்தைகள். 1999ம் ஆண்டு, எங்களை விட்டு விட்டு, அன்வர் சென்று விட்டார். அவர், வியாபாரம் செய்து வருகிறார். மாதம், 25 ஆயிரம் ரூபாய், சம்பாதிக்கிறார்.ஜீவனாம்சம் கேட்டு, கோவை, குடும்ப நல கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தேன். என் கணவர் தாக்கல் செய்த பதில் மனுவில், "பாத்திமா, என் மனைவி அல்ல; குழந்தைகள் எனக்கு பிறக்கவில்லை; முஸ்லிம் வழக்கப்படி, திருமணம் நடந்திருந்தால், ம‹தியில் உள்ள, அதற்கான பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும். மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும்' என, கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த, குடும்ப நல கோர்ட், "இரண்டு குழந்தைகளும், ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது. ஆவண சாட்சியங்கள் மூலம், திருமணம் நிரூபிக்கப்படவில்லை. எனவே, ஜீவனாம்சம் பெற, பாத்திமாவுக்கு உரிமையில்லை' என, உத்தரவிட்டது. குடும்ப நல கோர்ட் உத்தரவை, என்னைப் பொருத்தவரை, ரத்து செய்ய வேண்டும். ஜீவனாம்சம் பெற, எனக்கு உரிமையுள்ளது என, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த, நீதிபதி கர்ணன் பிறப்பித்த உத்தரவு:திருமணம் தொடர்பாக, அனைத்து சடங்குகளையும் பின்பற்றினால் தான், அது, செல்லத்தக்க திருமணம் என்கிற பொருள் அல்ல. இந்த வழக்கைப் பொருத்தவரை, பாரம்பரிய சடங்குகள் பின்பற்றப்படவில்லை; ஆனால், இரண்டாவது குழந்தை பிறக்கும் போது, அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் தெரிவித்து, மருத்துவமனை ஆவணங்களில், கணவர் கையெழுத்திட்டுள்ளார்.எனவே, குழந்தைகள், முறைதவறி பிறந்தது என்கிற கேள்வி எழவில்லை. ஏனென்றால், இரண்டாவது குழந்தை பிறப்பின் போது, அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டு, கணவர் கையெழுத்திட்டுள்ளதால், பாத்திமா தனது மனைவி என்பதை, கணவர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். திருமண சடங்குகள் என்பது வெறும் சம்பிரதாயம்; கண்டிப்பு இல்லை.

ஒரு பெண், 18 வயதை அடைந்து, 21 வயது நிரம்பிய ஆணுடன், செக்ஸ் உறவு கொண்டு, அதன் மூலம், கர்ப்பமுற்றால், அந்தப் பெண்ணை, மனைவி என்றும், ஆணை, கணவன் என்றும் கருத வேண்டும். அந்தப் பெண், கர்ப்பம் அடையவில்லை என்றாலும் கூட, அவர்களது உறவுக்கான ஆவண சாட்சியம் இருந்தால், கணவன், மனைவி என்றே அவர்கள் கருதப்படுவர்.

உடல் ரீதியான தொடர்புக்குப் பின், அவர்கள் கருத்து வேற்றுமையால் பிரிந்து விட முடிவெடுத்தால், கோர்ட் மூலம் விவாகரத்து பெறாமல், வேறு திருமணம் செய்ய முடியாது.

தாலி கட்டுவது, மாலை, மோதிரம், மாற்றிக் கொள்வது, அக்னி ”ற்றி வருவது, திருமணத்தை பதிவு செய்வது, இவை எல்லாம், சமூகத்தை திருப்திபடுத்த, ஒவ்வொருவரும் தங்கள் மத வழக்கப்படி செய்து கொள்பவை.


இருந்தாலும், எந்த ஜோடியும், சட்டப்படி திருமண வயதை எட்டிய பின், உடல் ரீதியான தொடர்பில் ஈடுபட்டால், அதை, செல்லத்தக்க திருமணம் என கருத வேண்டும்.

அவர்களை, கணவன், மனைவி என, கருத வேண்டும்.மத வழக்கப்படி, சடங்குகளை பின்பற்றி நடத்தப்படும் திருமணங்களிலும், உடல் ரீதியான தொடர்பு நடக்கவில்லை என்றால், அந்த திருமணம் தோல்வியடைந்து, ரத்தாகும் நிலை ஏற்படும். எனவே, செல்லத்தக்க திருமணத்தில், சட்ட ரீதியான முக்கிய அம்சம், கணவன், மனைவிக்கு இடையேயான, உடல் ரீதியான தொடர்பு.இந்த வழக்கைப் பொருத்தவரை, மனுதாரருக்கு, ஜீவனாம்ச தொகை, மாதம், 500 ரூபாய், 2000ம் ஆண்டு முதல், வழங்கப்பட வேண்டும். மூன்று மாதங்களுக்குள், பாக்கித் தொகையை, கணவர் வழங்க வேண்டும். அதன்பின், மாதம் தோறும், வழங்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார்.

Saturday, June 15, 2013

அடுத்தவன் மனைவி மீது எப்பவுமே நமக்கு தனி பாசம்தான்!! கோவை நீதிமன்றத்தில் நடந்த சம்பவம்

சமீபகாலமாக இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான திருமணங்கள் சில இரவுகளுக்குப் பிறகு விவாகரத்தில் போய்முடிகிறது.  அல்லது கணவன் தனிக் குடுத்தனம் வர மறுப்பதால்  மனைவியின் பொய் வரதட்சணை வழக்கில் சென்று முடிகிறது.  இன்னும் சில திருமணங்களில் சில இரவுகளிலே மனைவிக்கு சலிப்பு ஏற்பட்டு வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டு கடைசியில் கணவனுக்கு மனைவியின் கையாலே சிவலோக பதவி அடையும் பாக்கியமும் கிடைத்துவிடுகிறது.   இதுதான் செய்தித்தாள்களில் தினமும் வந்துகொண்டிருக்கிற இந்திய குடும்ப கலாச்சார செய்திகள்.  உதாரணத்திற்கு இன்று தினமலரில் வந்துள்ள குடும்ப செய்திகள்:
  • உ.பி., பெண் எம்.எல்.ஏ., "கள்ளத் தொடர்பு' அம்பலம்  ஜூன் 15,2013  லக்னோ: உத்தர பிரதேச பெண், எம்.எல்.ஏ., ஒருவர் மீது அவரின் கணவர், கள்ளத்தொடர்பு புகார் கூறியதால் ஏற்பட்ட பரபரப்பை விட, "நீ என் கணவனே கிடையாது' என பெண், எம்.எல்.ஏ., கூறியதும், அதிர்ச்சி [...]
  • கணவன் கொலை வழக்கில் மனைவி உட்பட 4 பேர் கைது   ஜூன் 15,2013  ஓசூர்: கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கள்ளக்காதலனுடன் சேர்ந்து, கணவருக்கு, சாப்பாட்டில், தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலன் உள்ளிட்ட, [...]
  • மனைவியை குத்திய கத்தியுடன் கணவன் சரண்   ஜூன் 15,2013  திருப்பூர்: மனைவி மற்றும் குடும்பத்தாரை, கத்தியால் குத்திய நபர், ரத்தம் சொட்டும் கத்தியுடன், போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். திருப்பூர், எஸ்.வி., காலனியில் வசிப்பவர் சரவணன், 36; பனியன் [...]
இந்த செய்திகளையெல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல கோவை நீதிமன்றத்தில் நடந்த சம்பவம் இளம் மனைவிகளை காப்பாற்றுவதில்  சட்டம் படித்தவர்களின் பெருந்தன்மையான பங்கை பக்குவமாக படம் பிடித்துக் காட்டியுள்ளது.

காதலுக்குப் பிறகு திருமணம் என்ற பெயரில் சில இரவுகளை பகிர்ந்துகொண்ட ஒரு ஜோடி வழக்கம்போல பிரிந்துவிட்டது. பொதுவாக கணவனைப் பிரிந்துவரும் அபலைப் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்து அரவணைக்க காவல்துறையும்,  பல சட்ட மேதைகளும் காத்துக்கொண்டிருக்கிறார்கள் (பொய் வரதட்சணை வழக்குப்போடும் இளம் மனைவிகளை அனுபவிப்பது யார் தெரியுமா?).

அப்படி ஒரு வழிகாட்டுதலில் விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு வந்த அந்த இளம் மனைவியைக் கண்ட கணவன் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார்.  அடுத்தவனின் மனைவியானாலும் அவளை  பாதுகாக்கவேண்டும் என்ற கடமையுணர்ச்சியுடன் இளம் மனைவியின் வழக்கறிஞர் கணவனை அடித்திருக்கிறார்.  வழக்கம்போல சட்டம் படித்தவர்கள் ஒன்றுகூடி  கைகலப்பில் இறங்கி அந்தக் கணவனை நீதிமன்றத்திலேயே தாக்கியிருக்கிறார்கள்! 

செய்தியை படிப்பதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்:

1. சென்ற ஆண்டு கோவை நீதிமன்றத்தில் ஆள் மாறாட்டம் செய்து விவாகரத்து வழக்குகளை நடத்தி  வழக்கறிஞர்கள் பிடிபட்டதாக செய்தி வந்திருந்தது.

2.  அப்பாவிப் பெண்கள் குடும்பப் பிரச்சனைக்காக காவல்நிலையத்தையோ, சட்டம் படித்தவர்களையோ நாடினால் தகுந்த ஆலோசனை வழங்காமல் தவறாக வழிகாட்டி கணவனுக்கெதிராக அப்பாவி மனைவியரை பொய் வரதட்சணை வழக்குப் போடத்தூண்டுவதாக தேசிய பெண்கள் வாரியத் தலைவி சில ஆண்டுகளுக்கு முன் கூறியிருக்கிறார்.  
  •  National Commission for Women (NCW) chairperson Girija Vyas said that it was lack of awareness that led to false cases under 498A. "I would not like to use the term misuse. There is lack of awareness amongst people that is exploited by lawyers and police. We feel there is no need to review the law,'' Vyas said. (The Times of India, 1Feb 2009)

இப்போது இந்த கோவை நீதிமன்ற வளாகத்தில் நடந்த சம்பவத்தை படித்துப் பாருங்கள்.  அடுத்தவன் பொண்டாட்டி மேல நமக்கு எவ்வளவு பாசம் இருக்குதுன்னு புரியும்!

விவாகரத்து வழக்கில் ஆஜராக வந்த கணவரை காப்பாற்றிய மனைவி: கோர்ட் வளாகத்தில் நெகிழ்ச்சி   ஜூன் 15,2013 தினமலர்

கோவை:கோர்ட் வளாகத்தில் கணவருக்கும், மனைவியின் வக்கீலுக்கும், இடையே ஏற்பட்ட தகராறில், கணவரை காப்பாற்றி வெளியே அழைத்துச் சென்றார், விவாகரத்து வழக்கு தொடர்ந்த அவரது மனைவி.

கோவையைச் சேர்ந்தவர் மகேஸ்வரி, 25. சென்னையைச் சேர்ந்த கோபால் என்பவரை காதலித்து, இருவீட்டாரின் எதிர்ப்பையம் மீறி திருமணம் செய்து கொண்டனர். சில ஆண்டுகளே சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளுக்குள், கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கணவர் மீது கோபம் கொண்ட மகேஸ்வரி, தனியாக பிரிந்தார்; விவாகரத்து கேட்டு, கோவை குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜராக இருவரும் கோவை கோர்ட் வளாகத்துக்கு வந்தனர்.விசாரணைக்காக கோர்ட் படியேறும்போது, மகேஸ்வரியை பார்த்த கோபால் ஆத்திரத்துடன், ""எனக்கு தெரியாமல், விவாகரத்து நோட்டீஸ் அனுப்புகிறாயா; என்னை கோர்ட்டுக்கு இழுத்து அசிங்கப்படுத்துகிறாயா,'' எனக் கேட்டார். குறுக்கிட்ட மகேஸ்வரியின் வக்கீல், ""வழக்கு என வந்த பின்,இங்கே எதுவும் பேசக்கூடாது,'' என எச்சரிக்கை விடுத்தார்.

இதனால், வாக்குவாதம் ஏற்பட்டு, கோபாலும், வக்கீலும் கைகலப்பில் ஈடுபட்டனர். வக்கீல் தாக்கப்படுவதை பார்த்த, அங்கிருந்த வக்கீல்கள் சிலர் கோபாலை தாக்கினர். இதில், கோபால் கீழே விழுந்தார். கணவரின் நிலைமையைப் பார்த்து, பரிதாபப்பட்ட மகேஸ்வரி, ஓடிச் சென்று கணவர் தாக்கப்படுவதை தடுத்தார். ""எங்களுக்குள், இந்த வழக்கு வேண்டாம்,'' எனக்கூறி, கணவரை கைத்தாங்கலாக வெளியே அழைத்துச் சென்றார். இவர்களை பின்தொடர்ந்து வக்கீல்களும் சென்றனர்.

ரேஸ்கோர்ஸ் போலீசில் இருதரப்பினரும் புகார் கொடுத்தனர். இச்சந்தர்ப்பத்தில் மகேஸ்வரி, அங்கிருந்து வெளியே சென்று விட்டார். இதன் பின், மாலையில் வக்கீல்கள் சிலர், போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து கொடுத்த புகாரை திரும்ப பெற்றுக்கொண்டனர். இதேபோல், கோபாலும் தனது புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார். கோர்ட்டில் நடக்கும் விவாரத்து வழக்கு வாபஸ் ஆகுமா அல்லது மீண்டும் கணவனும், மனைவியும் கோர்ட்க்கு வருவார்களா என்பது, அவர்களுக்குத்தான் தெரியும்.


Wednesday, June 12, 2013

சில இரவுகளுக்கு பல இலட்சம் கேட்கும் இளம் மனைவிகள்

தற்போது இந்தியாவில் இளம் பெண்களிடையே பரவலாக ஒரு புது வியாபார யுக்தி பரவிவருகிறது.  சில இரவுகள் கணவனுடன் படுக்கையை பகிர்ந்துகொண்டதற்காக தேய்மானச் செலவாக பல இலட்சங்களை நஷ்ட ஈடாக கணவனிடம் கேட்கிறார்கள்.  இதற்கு அவர்கள் “குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை” பயன்படுத்துகிறார்கள். 

இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் 2005ம் ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.  இந்த சட்டத்தின் மூலம் கணவனுடன் சில இரவுகளை கழித்ததற்காக கணவனின் சொத்துக்கள், வீடு, மாதந்தோறும் பல ஆயிரங்களில் பராமரிப்பு செலவு மற்றும் தன்னை கணவன் பயன்படுத்தியதற்காக தேய்மானச் செலவு பல இலட்சங்கள் என பட்டியலிட்டு நீதிமன்றத்தில் ஒரு மனு கொடுத்தால் உடனடியாக நீதிபதி இவையனைத்தையும் கணவன் கொடுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டுவிடுவார். 

கணவன் போதிய அளவு பண வசதியில்லாதவர் என்றால் சிறுநீரகத்தை விற்றாவது பணத்தைக் கட்டவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடும்.

Punjab: Man wants to sell kidney to pay alimony - Times Of India

 The Times of India

CHANDIGARH: Unable to pay maintenance to his wife, a man has approached a court in Punjab to allow him to sell his one of his two kidneys so that he could pay up.

The Ropar resident, who found the sum stipulated by the court way beyond his means, filed an application under section 125 of CrPC (order for maintenance of wives, children) in the court of the judicial magistrate on August 22, seeking permission to sell his kidney to pay Rs 8,000 as interim maintenance to his wife.

Narrating his ordeal in the application, he said the court had ordered him to pay his wife a monthly interim allowance of Rs 3,500 under CrPC and another interim maintenance of Rs 4,500 per month under the Domestic Violence Act. Denying any permanent means of livelihood, he said he found it difficult to sustain himself as his small monthly earnings made up for only Rs 3,600 per month.

Despite his meagre income, the man tried to pay maintenance to his wife regularly. But, under the circumstances, he is left with no option but to sell his body organs.
இதுபோன்ற வழக்குகளில் விசித்திரமான விஷயம் என்னவென்றால் இந்தியாவில் கல்வியறிவில்லாத பல ஏழைப் பெண்கள்கூட கூலி வேலை செய்து தங்களது வாழ்வை தானே சுயமாகவும், கௌரவமாகவும் நடத்துகிறார்கள்.  கல்வி கற்க வேண்டிய வயதில் பல குழந்தைகள்கூட தொழிலாளிகளாகவேலை செய்து  வாழ்கிறார்கள்.    

ஆனால்  உயர் கல்வி கற்று சுயமாக சம்பாதிக்கும் திறனும், அறிவும் உள்ள பல இளம் மனைவிகள்
சட்டம் சாதகமாக இருக்கிறது என்பதற்காக தங்களது கணவனுடன் சில இரவுகள் கழித்ததற்காக பல இலட்சங்களை கணவனிடம் வாங்கித் தரும்படி நீதிமன்றத்தை நாடுகிறார்கள்.  இவர்களால் பணம் ஈட்டி சுயமாக தங்களை பராமரித்துக் கொள்ள முடிந்தாலும்  இப்படி பணம் சம்பாதிக்க நினைப்பது  பாரம்பரியம் மிக்க ஒரு தொழிலை நினைவு படுத்துவது போல இருக்கிறது அல்லவா!!!! இந்திய சட்டங்கள் இப்படி பெண்களை மாற்றிவிட்டதா? அல்லது இளம் பெண்கள் இப்படி மாறிவிட்டார்களா?  



குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமான இன்று  கல்வி கற்க முடியாமல் கடினமாக உழைத்து வாழ்க்கையை நடத்தும் குழந்தைகள் படும் இன்னல்களை ஒரு பக்கம் நினைத்துப் பார்க்கும் போது மற்றொரு பக்கம் நன்கு படித்து அனைத்து வசதிகளுடன் கூடிய இளம் பெண்கள் இப்படி சுய கௌரவத்தை இழந்து பணம் ஈட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்த்தால் அருவருப்பாக இருக்கிறது.


Friday, May 31, 2013

பள்ளித் தேர்வில் தோல்வியடைந்தால் தற்கொலையா? தேசியத் தலைவர்கள் காட்டும் வழிமுறை என்ன?

மற்ற நாடுகளில் இல்லாத அதிசயமான கல்விமுறை இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறது.  தேர்வு என்பதை ஏதோ யுத்தகளம் போல உருமாற்றி வெளியே துப்பாக்கி ஏந்திய போலிஸ் காவல், பறக்கும் படை என்று அறிவு வளர்ச்சிக்கான கல்வியை ராணுவ யுத்தம் போல மாணவர்களின் மனதில் ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்திவிட்டார்கள்.  இதனால் பல மாணவர்களுக்கு கல்வி கற்று வாழ்க்கைக்குத் தேவையான அறிவை பெற வேண்டும் என்ற எண்ணத்தை விட போரில் (தேர்வில்) தோற்றுவிடக்கூடாது என்ற அச்சமான மனநிலைதான் உருவாகியிருக்கிறது.

தேர்வு முடிவுகள் வெளியானதும்  தோல்வியடைந்த மாணவர்கள் அவமானத்தாலோ அல்லது பெற்றோருக்கு பயந்தோ தற்கொலை  செய்து கொள்வதும்,  வீட்டை விட்டு ஓடிப்போவதும் சமீப ஆண்டுகளில் அதிகரித்து இருக்கிறது. சாதாரண பள்ளித் தேர்வில் தோல்வியடைந்தால் இதுதான் கடைசி வழியா?  மாணவர்கள் நமது தேசியத் தலைவர்களின் பாதையை பின்பற்றத் தவறுவதால் இதுபோன்ற துயரங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

பிரதமர் இதுவரை நேரடியாக மக்களை சந்தித்து தேர்தல் என்னும் தேர்வில் வெற்றி பெற்றா இன்று இந்தப் பதவியில் இருக்கிறார்? உயர் பதவியை அடைவதற்கும், மக்களின் தலைவராக இருப்பதற்கும் தேர்வோ, தேர்தலோ அவசியம் இல்லை அப்படியே அவசியம் என்றால் அதற்கான வழிமுறைகளில் உள்ள ஓட்டைகளின் மூலமும் வாழ்வில் வெற்றி பெறலாம் என்றல்லவா பிரதமரின் பதவி நல்ல வழிகாட்டியிருக்கிறது.  இதையெல்லாம் மாணவர்கள் கவனிக்கத் தவறிவிட்டார்கள்.  நாட்டை ஆளும் பதவிக்கே மாற்றுவழி இருக்கிறதென்றால்  சாதாரண பள்ளித் தேர்வில் தோல்வியடைந்தால் வாழ்வில் வெற்றிபெற வேறு எத்தனையோ நேர்வழிகள் இருக்கின்றன என்பதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

 (படம்: தினமலர் 31 மே 2013)

புதுடில்லி: பிளஸ் 2 தேர்வில், மகள் தோல்வி அடைந்ததால், தாய், தந்தை உட்பட, குடும்ப உறுப்பினர்கள், நான்கு பேர் விஷம் குடித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர்களில், மூன்று பேர் பலியாயினர்; ஒருவர் உயிர் பிழைத்தார்.

டில்லியை சேர்ந்தவர், பிரதீப் குமார். இவரின் மகள், பிரியங்கா, பிளஸ் 2 தேர்வில், தோல்வி அடைந்தார். இதனால், ஆத்திரமடைந்த பிரதீப், மகள் பிரியங்காவையும், மனைவி, கமலேஷையும் வெகுவாக கடிந்து கொண்டார்.

மனமுடைந்த தாய், மகள் இருவரும் விஷம் குடித்தனர். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை எதிர் நோக்கியுள்ள, பிரியங்காவின் சகோதரன், நீரஜ்ஜும், தானும் தேர்வில் தோல்வியுற்றால், தந்தையின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என, பயந்தான். அதனால், அவனும் விஷம் குடித்தான்.

இவர்கள் அனைவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபரம் அக்கம் பக்கத்தினரின் மூலம், பிரதீப்புக்கு தெரிய வந்தது. மருத்துவமனைக்கு சென்ற பிரதீப்பும், அங்கு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். எனினும், அவர் உயிர் பிழைத்தார். மற்ற மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Sunday, May 19, 2013

விலங்கினத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதுண்டா?


பெற்ற குழந்தையை இப்படி கொடூரமாகக் கொல்லும் வித்தியாசமான வழக்கம் இந்த இனத்தில் மட்டும்தான் இருக்கிறது. 
மே 20,2013 தினமலர்

திருவண்ணாமலை: குடும்ப தகராறு காரணமாக, குழந்தையை காலால் மிதித்து, கொலை செய்ய முயன்றதுடன், மற்றொரு குழந்தையை சுவரில் அடித்து மோதிய தாய், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றது, தோல்வியில் முடிந்தது. திருவண்ணாமலை அடுத்த, வேல் நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை, 35. இவரது மனைவி சிவசங்கரி, 30. இவர்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு, ஹரிணி, 4, லத்திகா, 3, என்ற பெண் குழந்தைகள் உண்டு.

கணவன், மனைவி இடையே, கடந்த சில மாதங்களாக, குடும்ப தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கரி, லத்திகாவின் கழுத்தில், காலால் மிதித்தார், லத்திகா பரிதாப அலறலுடன் இறந்தது. ஹரிணியை, சுவரில் ஓங்கி அடித்து விட்டு, பரபரப்பாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியில் உள்ளோர், ஏழுமலையின் வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அங்கு, உயிருக்கு போராடி கொண்டிருந்த ஹரிணியையும், சிவசங்கரியையும் மீட்டு, வேலூர், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து, திருவண்ணாமலை நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Wednesday, May 08, 2013

நவதுவாரங்களை மூடிக்கொள்ளுங்கள்!!!

ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் ‘உள்ளே’ இருப்பதற்கும், கிராமத்தில் ஒடும் பஸ்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.,ஆனால் இந்த பஸ்கள்தான் காரணம் என்பது போல, பல பஸ்கள் எரிக்கப்பட்டுவிட்டன.,விளைவு பகலில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகின்றன.,மாலை 6 மணிக்கு மேல் மறுநாள் காலை 6 மணி வரை அரசாங்க பஸ்கள் எதுவும் இயக்கப்படுவது இல்லை.அமைச்சர்கள்,அதிகாரிகள்,நகரவாசிகள் யாருக்கும் இந்த பஸ்களின் அருமை தெரியாததால், அவர்கள் தத்தம் வேலையை பார்த்துக்கொண்டு உள்ளனர்.,ஆனால் கிராமத்து மக்களின் மிகப்பெரிய தொடர்பு இந்த அரசு பஸ்கள்தான்.,இதனால் அந்த பகுதி மக்கள் பலரின் அன்றாட பிழைப்பு கேள்விக்குறியாகி இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்...எதையும் தாங்கும் கிராமத்து மக்கள் பாவம் இதையும் தாங்கிக்கொண்டு இருக்கின்றனர்.  - (தினமலர் 9 மே 2013)
=========
அவசியமில்லாதபோது இரவில் பெண்கள் தனியாக வெளியே செல்வது ஆபத்து என்று கூறியபோது நாடே ஒன்று திரண்டு உரிமையை பறிக்கிறார்கள் என்று எதிர்ப்புக் குரல் கொடுத்தார்கள். 

இப்போது சுதந்திர இந்தியாவில் ஆண், பெண், சிறுவர், சிறுமியர் என்ற பாகுபாடு இல்லாமல் யாரும் ஆறு மணிக்கு மேல் வெளியே செல்லவோ, பயணம் செய்யவோ முடியாது என்ற நிலை.  இது சுதந்திர இந்தியாதானா?   இதுபோன்ற வன்முறைகளும், இழி நிலையும் பல ஆண்டுகளாக மாற்றமில்லாமல் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. சுயநல தீவிரவாதிகளால் நடத்தப்படும் இதுபோன்ற வன்முறைகளில் இதுவரை பல கோடி அப்பாவி மக்கள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். இதற்கு எதிராக ஒருவரும் வாயை திறக்காமல் நவ துவாரங்களையும் மூடிக்கொண்டு இருக்கிறார்களே!!!!

குடிமக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் இந்த செயலை நீதிமன்றங்கள் வாய்மூடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன.  இதுபோன்ற சம்பவங்களை உயர்நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ தானாக முன்வந்து (Suo Moto) வழக்காக ஏற்று மக்களின் உரிமையை நிலைநாட்ட தவறுவது ஏன்?

Tuesday, April 30, 2013

அத்தை மகனை கொலை செய்ய பத்தாம் வகுப்பு மாணவனை கூலிப்படையாக்கிய கல்லூரி மாணவி!

பெண்ணுரிமைக்கு குரல் கொடுக்கும் கூட்டம் அதிகமானவுடன் பெண்ணுரிமை எப்படியெல்லாம் தறிகெட்டு அலைகிறது!  காதலனை கைப்பிடிக்க கூலிப்படை வைத்து அத்தை மகனை கொலை செய்திருக்கும் இந்த இளம் பெண்ணின் வீரத்தை என்ன சொல்வது?

கொலை செய்ய தூண்டியது காதல் ; கல்லூரி மாணவி உட்பட 5 பேர் கைது
 
மே 01,2013 தினமலர்


திருப்பூர்: திருப்பூர் அருகே, காதலனுடன் வாழ வேண்டும் என்பதற்காக, அத்தை மகனை கொலை செய்ய தூண்டிய கல்லூரி மாணவி உட்பட, ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்தகுட்டன், 27; கட்டட தொழிலாளி. இவருக்கும், இவரது மாமா மகள், அவிநாசியைச் சேர்ந்த, சத்யா, 23, என்பவருக்கும், வரும், 6ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. சத்யா, திருப்பூரில் உள்ள கல்லூரியில், இரண்டாமாண்டு எம்.ஏ., படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த, 25ம் தேதி, குண்டடம், சித்தூர் பிரிவு அருகே, ஆனந்தகுட்டன், கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவர் அணிந்திருந்த செயின், மோதிரம், மொபைல் போன் எதுவும் திருடப்படவில்லை.

இன்ஸ்பெக்டர்கள் ரங்கராஜன், ஹேமா தலைமையில், தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சத்யா, திருப்பூர் செவந்தாம்பாளையத்தைச் சேர்ந்த, ஆட்டோ டிரைவர் மணிகண்டனை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆறு மாதங்களுக்கு முன், அத்தை மகன் ஆனந்தகுட்டனுடன், திருமணம் நிச்சயிக்கப்பட்டது. காதலனை மறக்க முடியாத சத்யா, ஆனந்தகுட்டனை கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த, 25ம் தேதி, திருப்பூருக்கு, ஆனந்தகுட்டனை வரவழைத்து, திருமண விஷயம் எனக் கூறி, மணிகண்டனுடன், ஆட்டோவில் அனுப்பி வைத்துள்ளார். அவர்களுடன், ஜெய்நகரைச் சேர்ந்த, கல்லூரி மாணவர்கள் சதீஷ்குமார், 21, விவேக், 21 மற்றும் 10ம் வகுப்பு மாணவன் ரஞ்சித்குமார், 16 ஆகியோரும் சென்றுள்ளனர்.

கோமங்கலம் அருகே, ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில், மணிகண்டன், இரும்பு ராடால், ஆனந்தகுட்டனை தலையில் அடித்தும், கயிற்றால் கழுத்தை இறுக்கியும், கொலை செய்துள்ளார். உடன் வந்த, மூன்று பேரின் உதவியுடன், உடலை ஆட்டோவில் ஏற்றி, குண்டடம் அருகே வீசி சென்றுள்ளார். இவர்கள், ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு, தாராபுரம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
 ===========

கொசுறு செய்தி:  அமெரிக்காவில் இப்போது கருத்தடை மாத்திரை எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் 15 வயது சிறுமி முதல் அனைவருக்கும் தாராளமாக கிடைக்க அரசாங்கம் ஏற்பாடு செய்துவிட்டது.  நம்ம ஊருக்கு எப்போது இந்த புதிய பெண்ணுரிமை நடைமுறைக்கு வரும் என்று ஆவலுடன் காத்திருக்கிறோம். காமத்தீயில் ஏங்கிக் கொண்டிருக்கும் பல இளம்பெண்களுக்கு கலாச்சாரம் கட்டுப்பாடு என்ற பிற்போக்குத்தனத்தால் இதுபோன்ற உரிமைகள் கிடைக்க தாமதமாகிறது.  இந்தியாவிற்கு மேலும் பல புதிய பெண்ணுரிமை சட்டங்கள் தேவைப்படுகிறது. பெண்ணுரிமைவாதிகள் கவனிப்பார்களா?

The U.S. government is moving the morning-after pill over the counter but only those 15 and older can buy it -- an attempt to find middle ground just days before a court-imposed deadline to lift all age restrictions on the emergency contraceptive. (Fox News.com)

Friday, April 19, 2013

மனைவி கையால் கலந்து கொடுக்கும் மதுவை கணவன் அருந்தலாமா?

ஆண்கள் குடித்து மகிழ வேண்டும் என்பதற்காகத்தான் அரசாங்கமே மதுக்கடைகளை நடத்தி வருகிறது.  இந்த இன்பத்திற்கு மேலும் இன்பமூட்ட மனைவி கையால் அந்த மதுவை சரியான விகிதத்தில் கலந்து  அதை வாங்கி அருந்தினால் மேலும் இன்பம் கிடைக்கும் என்று கணவன்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  இப்படி நினைத்துக் கொண்டிருக்கும் கணவர்களுக்கு இந்த செய்தி. 

இந்திய கள்ளக் காதல் சட்டப்படி கள்ளக் காதலில் ஈடுபடும் மனைவி குற்றவாளி கிடையாது.  இப்படி சட்டமே குற்றவாளி இல்லை என்று சொல்லும்போது கள்ளக் காதலில் ஈடுபடும் மனைவியை கணவன் தடுக்க நினைப்பது சட்டப்படி சரியாகுமா? என்று பல மனைவியர்கள் நினைக்கிறார்கள்.  இப்படி மனைவியின் கள்ளக்காதல் உரிமையில் தலையிட்டு மனைவியின் பெண்ணுரிமையை பறிக்க முற்பட்ட ஒரு கணவருக்கு தக்க பாடம் கற்பிக்க எண்ணிய அவரது மனைவி கணவனுக்கு அன்பாக மது கொடுத்திருக்கிறார்.  அந்த மதுவில் அவர் கலந்தது அன்பா அல்லது இந்திய கள்ளக்காதல் சட்டமா?

IPC497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

கணவரை கொல்ல மதுவில் விஷம்: தவறுதலாக குடித்த மற்றொருவர் பலி
 
ஏப்ரல் 20,2013 தினமலர்

ராமநாதபுரம்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, விஷம் கலந்த மது கொடுத்து மனைவி கொல்ல முயன்றார். தவறுதலாக விஷமதுவை மற்றொருவர் குடித்து இறந்தார். இதுதொடர்பாக, பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் காட்டூரணியை சேர்ந்தவர் கண்ணன். இவரது நண்பர் முனீஷ்குமார், 27. கட்டட பணி செய்த இருவரும் நண்பர்கள். அடிக்கடி, நண்பர் வீட்டுக்கு சென்றவந்த முனீஷ்குமாருடன், கண்ணன் மனைவி வனிதாவுக்கு, 24, கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை அறிந்த கண்ணன், இருவரையும் கண்டித்தார். கள்ளக்காதலுக்கு, இடையூறாக இருந்த கணவரை, கொலை செய்ய, வனிதா திட்டமிட்டார். இதற்கு, கள்ளக்காதலன் முனீஷ்குமார் உதவினார்.

குடிப் பழக்கத்தை சாதகமாக பயன்படுத்தி, கண்ணனை கொலை செய்ய, முடிவு செய்தனர். கடந்த 16ம் தேதி, கண்ணன், குடித்து விட்டு, மீதி வைத்திருந்த பிராந்தியில், பூச்சி மருந்தை கலந்தனர்.

அன்று இரவு, மீதி சரக்கை குடிக்க, தேவிப்பட்டினம் அருகே இலந்தைக் கூட்டத்தைச் சேர்ந்த, ராதன் என்பவர் வீட்டிற்கு, அந்த மது பாட்டிலுடன் கண்ணன் சென்றார். அங்கு தாராளமாக மது பறிமாறப்பட்டதால், கண்ணன் கொண்டு சென்ற சரக்கை, யாரும் குடிக்கவில்லை. அது, அங்கேயே கிடந்தது. கடந்த, 17ம் தேதி, ராதன் வீட்டிற்கு சென்ற அப்பகுதியை சேர்ந்த பாலமுருகன், வெஸ்லி உட்பட சிலர் மது அருந்தினர். மது விருந்துக்கு, கடைசியாக வந்த ரமேஷ் என்பவருக்கு, சரக்கு கிடைக்கவில்லை. இதனால், கண்ணன் முந்தின நாள் கொடுத்து வைத்திருந்த மதுவை, ரமேஷ் மட்டும் குடித்தார். சிறிது நேரத்தில், அவர் மயக்கமடைந்தார். அதிர்ச்சியடைந்த நண்பர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று முன்தினம், அவர் இறந்தார். தேவிப்பட்டினம் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். ரமேஷ் குடித்த மது பாட்டிலை, போலீசார் பரிசோதனைக்கு அனுப்பினர். அதில், விஷம் கலந்திருந்தது தெரிய வந்தது. பாட்டிலை கொடுத்த கண்ணனிடம், போலீசார் விசாரித்தனர். தெடர்ந்து நடந்த விசாரணையில், உண்மை வெளியானது. இதையடுத்து, வனிதா மற்றும் முனீஷ்குமாரை, போலீசார் கைது செய்தனர்.

Sunday, April 14, 2013

கழிவறையில் வாழ்க்கை - தவறான பாதையில் சரியாக செல்லும் மக்கள்

சமீபத்தில்  நடந்த டில்லி சம்பவத்தை மிகப்பெரிய தேசிய பிரச்சனையாக  பெரிதாக்கி உலக அளவில் பிரபலப்படுத்தி அவசர அவசரமாக பல ஒருதலைபட்சமான சட்டங்களை இயற்றிய அரசாங்கம் இவை எல்லாவற்றிற்கும் ஆணிவேராக இருப்பது “ஊழல்” என்று தெரிந்தாலும் அதனை ஒழிக்க உடனடி சட்டம் இயற்ற பல ஆண்டுகளாக தயக்கம் காட்டிக் கொண்டிருக்கிறது. 

இந்த விஷயம் பலருக்கும் தெரிந்தாலும் வழக்கம்போல நாம் இந்தியர்கள் என்று பெருமையாக ஒதுங்கி நின்று வேடிக்கை மட்டும் பார்க்கும் குடிகளுக்கு நடுவே மனித நேயம் வளருமா அல்லது தேய்ந்துபோகுமா? என்று எண்ணிப் பார்த்தால் பின்வரும் செய்தியில் பதில் இருக்கிறது.

தேசிய அளவில் புற்றுநோய் போல பரவியுள்ள ஊழலை ஒழிக்க எந்த இந்தியக் குடியும் விளக்கேந்தி சட்டம் இயற்றும்வரை ஓயமாட்டோம் என்று போராடவில்லை! இதுபோன்ற போராட்டங்கள் செய்தித்தாளுக்கு ஒரு நாள் செய்திபோலத்தான் இன்றும் இருக்கிறது.

ஒரு கற்பழிப்பிற்காக அடுக்கடுக்காக பல சட்டங்களை அவசரமாக எழுதிய அரசாங்கம் பல ஆண்டுகளாக ஒழிக்கத்தவறிய ஊழலால் ஒரு அப்பாவிக் குழந்தை பொதுக் கழிவறையில் தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டதற்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்? 

இந்திய மண்ணில் பிறந்தால் லஞ்ச ஊழலால் அப்பாவிகளின் வாழ்க்கை கழிவறையில்தான் தள்ளப்படும்  என்று இந்தக் குழந்தை எதிர்காலத்தில் எண்ணிவிடுவதற்குள்ளாவது லஞ்ச, ஊழல் வழக்கில் சிக்குபவருக்கு மரண தண்டனை என்று சட்டம் எழுத  நேர்மையானவர்கள் இருக்கிறார்களா?
இந்த கர்பிணிப் பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை இனி எந்த ஒரு பெண்ணிற்கும் ஏற்படக்கூடாது என்று லஞ்சத்தை ஒழிக்க உடனடியாக ஒரு கடுமையான சட்டம் எழுதுவார்களா?  அல்லது “இளம் பெண்கள்” மட்டும்தான் பெண்களாக தலைவர்களின் கண்களுக்குத் தெரியுமா?

சேலம்:சேலம் அரசு மருத்துவமனையில், பிரசவத்துக்காக வந்த கர்ப்பிணி பெண்ணிடம், 1,000 ரூபாய் கேட்டு, ஊழியர்கள் விரட்டியடித்தனர். அந்த பெண்ணுக்கு, பேருந்து நிலைய கழிப்பறையில் குழந்தை பிறந்தது.

சேலம் அரசு மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக, நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர்.ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த லட்சுமி, 27, என்ற பெண் பிரசவத்துக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு, நேற்று அதிகாலை, 4:30 மணியளவில் வந்தார். அவருடன், கணவர் சாமுவேல், 33, குழந்தைகள் வெங்கடேஷ், நவீன் வந்தனர்.பெயர் விவரங்களை வாங்கிய ஊழியர்கள், 1,000 ரூபாய் பணம் இருந்தால் தான் சிகிச்சை கிடைக்கும் என, கூறியுள்ளனர். பணம் கொடுக்க வழியில்லாமல் தவித்த அவர், பழைய பேருந்து நிலையம் அருகே வந்து அமர்ந்துள்ளார். தொடர்ந்து, பிரசவ வலி அதிகரித்ததால், தவித்துள்ளார்.அங்கு வந்த பண்ணாரி என்ற பெண், மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு லட்சுமியை அழைத்துச் சென்று, பிரசவம் பார்த்தார். காலை, 11:00 மணிக்கு, லட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின், 108 ஆம்புலன்ஸ் மூலம், அரசு மருத்துவமனைக்கு லட்சுமி கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து, லட்சுமி கூறியதாவது:விஜயவாடாவில் இருந்து பிழைப்புக்காக, எட்டு மாதத்துக்கு முன், சேலம் வந்தோம். பழைய பேருந்து நிலையம் அருகில் தங்கி, கிடைத்த வேலையை செய்தோம். வெங்கடேஷ், நவீன் என, இரு குழந்தைகள் உள்ளனர்.மூன்றாவதாக கர்ப்பம் தரித்த நான், நேற்று அதிகாலை காலை, 4:30 மணிக்கு, சேலம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டுக்கு சென்றேன். அங்கிருந்தவர்கள், 1,000 ரூபாய் கேட்டனர். பணம் இல்லை என, கூறியதால், எனக்கு சிகிச்சையளிக்காமல் வெளியில் அனுப்பி விட்டனர்.பழைய பேருந்து நிலையத்தில் பண்ணாரி என்ற பெண், எனக்கு பிரசவம் பார்த்தார்.இவ்வாறு, அவர் கூறினார்.

பண்ணாரி கூறுகையில், ""லட்சுமியின் தவிப்பை உணர்ந்து, நானே பிரசவம் பார்த்து, குழந்தையை வெளியில் எடுத்தேன். தாயும், குழந்தையும் நன்றாக உள்ளனர்,'' என்றார்.

அரசு மருத்துவமனை டீன் வள்ளிநாயகம் கூறுகையில், ""இந்த பிரச்னை தொடர்பாக, கலெக்டர் விளக்கம் கேட்டுள்ளார். பிரசவ வார்டில் பணியில் இருந்த மருத்துவர், செவிலியர்களிடம், நாளை (இன்று) விசாரணை நடத்தப்படும்,'' என்றார்.
உதவி கேட்க வந்த இடத்தில் உதவி :

சேலம் மாவட்டம், ஆத்தூர் தேவியாக்குறிச்சியைச் சேர்ந்தவர் பண்ணாரி, 55. மாற்றுத்திறனாளி கணவருக்கு, கலெக்டரிடம் உதவித்தொகை கேட்பதற்காக, சேலம் வந்தார். நாளை (இன்று) நடக்கும் மக்கள் குறைதீர் முகாமில், கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக, கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், பிரசவ வலியால் தவித்த லட்சுமிக்கு, பண்ணாரி பிரசவம் பார்த்துள்ளார். யாரும் உதவிக்கு வராதபோது, தனி ஆளாக, கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய அவரை, அங்கிருந்த மக்கள் பாராட்டினர்.

Saturday, March 16, 2013

இந்த கொலைக்குக் காரணம் மதுவா, மனைவியா, கணவனா?

கள்ளுண்ணாமையை உலகிற்கு அழகிய தமிழில் கொடுத்த திருவள்ளுவரின் தமிழ்நாட்டில் இதுபோன்று குடும்பங்களில் நடக்கும் கொலைக்குக் காரணம் மதுவா, மனைவியா, கணவனா? இந்த சமூகக் குற்றங்களுக்கு  பொறுப்பேற்கப் போவது யார்? (மதுவால், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பு)

தினந்தோறும் "செக்ஸ் டார்ச்சரால்' கணவனின் ஆணுறுப்பை அறுத்து கொலை செய்த மனைவி : பொள்ளாச்சி அருகே பரபரப்பு
  
மார்ச் 17,2013 தினமலர்


ஆனைமலை: தினந்தோறும் செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால், கணவனின் ஆணுறுப்பை நறுக்கி, மனைவி கொலை செய்தார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த, ஆனைமலை, சுப்பேகவுண்டன்புதூரை சேர்ந்தவர் முத்துக்குமார், 36; கூலித் தொழிலாளி. இவருக்கும், கவுசல்யாதேவி, 29, என்பவருக்கும், ஒன்பது ஆண்டுகளுக்கு முன், காதல் திருமணம் நடந்தது. 7 மற்றும், 2 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. முத்துக்குமார் தினந்தோறும் குடித்துவிட்டு, அன்றாடம் மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். கடந்த பத்து நாட்களாக, கணவன் மனைவி இடையே தகராறு நடந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, முத்துக்குமார், வழக்கம் போல் வீட்டு முன் வாசலில் படுத்து உறங்கினார்.

நேற்று அதிகாலை, வீட்டிலிருந்து வெளியே வந்த முத்துக்குமாரின் மனைவி, கணவன், ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்து, கதறி அழுதார். இத்தகவல் தெரிந்ததும், வால்பாறை போலீசார், விசாரணை நடத்தினர். இறுதியாக, முத்துக்குமாரின் மனைவி மீது, போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பல கேள்விகளுக்கு, "தெரியாது' என, பதில் கூறியவர், ஒரு கட்டத்தில் கணவனை வெட்டிக் கொலை செய்ததை, ஒப்புக் கொண்டார். போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், "என் கணவர், அன்றாடம் குடித்து விட்டு, அடித்து கொடுமை படுத்தினார். தொடர்ந்து, செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார். குழந்தைகளை அடித்து துன்புறுத்தியதாலும், ஆணுறுப்பை அறுத்தும், முகத்தை சிதைத்தும் கணவரை கொலை செய்தேன்' எனக் கூறினார்.கவுசல்யாவை, போலீசார் கைது செய்தனர்.




தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றில், பெரும்பாலான வன்முறைக்கு, மதுவே காரணம் என்பது, தெரிய வந்துள்ளது. தமிழகத்தில், மகளிர் நலன் காக்கவும், மகளிர் நிலையை உயர்த்தவும் தேவைப்படும் நடவடிக்கைகளை அரசுக்கு பரிந்துரைக்க, தமிழ்நாடு மகளிர் ஆணையம், 1993ல் துவக்கப்பட்டது.
பெண்கள் பாதுகாப்பு :
இவ்வாணையம், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளில் இருந்து, அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது, விசாரணை செய்வது போன்ற பணிகளை செய்து வருகிறது.மேலும், கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு போன்றவற்றில், பெண்களின் பங்கேற்பு குறித்து ஆலோசனை வழங்குவது, பெண்கள் சிறைச்சாலை, மகளிருக்கான இல்லம் போன்றவற்றை பார்வையிட்டு, அரசுக்கு அறிக்கை அனுப்புவது போன்ற பணிகளை செய்து வருகிறது.இதில், பாதிக்கப்பட்ட பெண்கள், நேரடியாக புகார் மனு அளிப்பர். அவற்றை பெற்று, இரண்டு தரப்பினரிடமும் பேசி, சுமுக தீர்வு ஏற்படுவதற்கு, ஆணையம் வழிவகுக்கும்.

புகார்:கடந்த, ஏழு ஆண்டுகளில், பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகார்களில், குடும்ப வன்முறை அதிகரித்து வருகிறது என்பது, தெரிய வந்துள்ளது. இப்பிரச்னைக்கு மதுவே, அடிப்படை காரணம் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, மகளிர் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:ஆணையத்தில், மனு அளிக்கும் பெண்களை, தனித் தனியாக விசாரிக்கும் போது, பெரும்பாலான குடும்ப வன்முறைக்கு, மதுவே காரணம் என, தெரிய வந்துள்ளது. பெரும்பாலும், குடித்து விட்டு வரும் கணவர், இரவு முழுக்க, தொல்லை செய்வதாக பெண்கள் புகார் அளித்துஉள்ளனர். மேலும், அதிக போதை ஏறுகிற போது, சிகரெட்டால் சுடும் சம்பவங்களும் நடந்துள்ளன.இதனால், பல குடும்பங்கள் பிரிந்துள்ளன. இரவில், போதையில் தள்ளாடும் கணவர், காலையில் போதை தெளிந்த பின், நல்ல
வராக மாறி விடுகிறார் எனவும், பல பெண்கள் தெரிவித்துள்ளனர். போதையே, குடும்ப உறவுகளை அழித்து வருகிறது.

பாலியல் வன்முறை:
குடும்ப வன்முறை தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களில், 10 சதவீதம் மட்டுமே, மாமியார், நாத்தனார் கொடுமைகளை பற்றி வந்துள்ளது. மற்றபடி, பாலியல் வன்முறைகளும் அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, மகளிர் ஆணைய தலைவர், விசாலாட்சி நெடுஞ்செழியன் கூறியதாவது: நான் பொறுப்பேற்று, ஒரு மாதமே ஆகிறது. இருந்தாலும், 100 புகார் மனுக்களை பெற்றுஉள்ளேன். அடுத்த மாதம் முதல், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்ய உள்ளேன். கடந்த, ஏழு ஆண்டுகளில் பெறப்பட்ட மனுக்களின் தன்மை குறித்து, விரிவாக என்னால் கூற முடியாது. நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்து, விரைவில் விரிவான விசாரணை துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Tuesday, March 05, 2013

பெற்ற குழந்தையைக் கொல்வதும் பெண்ணுரிமையின் வெளிப்பாடுதான்

இந்தியாவில் சமீப காலமாக  நாகரீகம், பெண்ணுரிமை என்ற பெயரில் பல இளம் பெண்கள் திருமண பந்தத்தை அறுத்தெறிந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு துணையாக பல பெண்ணுரிமை சங்கங்கள் குரல் கொடுக்க அரசாங்கம் பல சட்டங்களைக் கொடுத்து வாழ்த்திக் கொண்டிருக்கிறது.

இதன்விளைவாக பல குடும்பங்களில் மருமகள்களால் பொய் வரதட்சணை வழக்குகள் உருவாக்கப்பட்டு கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பமும் அரசாங்கத்தால் நீதிமன்றங்களில் துன்புறுத்தப்படுகிறது.  மருமகள்கள் பொய்வழக்குகள் மூலம்தான் முழுமையான “பெண்ணுரிமையை” பெறமுடியும் என்ற பிரச்சாரமும் நடந்துகொண்டிருக்கிறது.

தங்களது உரிமைக்காக தாலி அறுத்துக் கொள்ள நீதிமன்ற வாயிலில் காத்திருக்கும் பெண்கள் தங்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒருபோதும் கருத்தில் கொள்வதில்லை.  தாய்மை இருந்தால்தானே பிள்ளையைப் பற்றிய எண்ணம் ஏற்படும்.  பிள்ளை பெற்றதால் மட்டும் ஒருவள் தாயாகி விடமுடியாது.

இதன் உச்சகட்டமாக இப்போது கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளை கொல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.  தாய் என்ற கருணை உள்ளத்தை இழந்துவரும் கேடு கெட்ட இனமாக இப்போது மனித இனம் மாறிக்கொண்டிருக்கிறது.  அதற்கு தவறான பெண்கள் ஆதரவு சட்டங்கள் வழி செய்துகொண்டிருக்கின்றன.




மார்ச் 05,2013 தினமலர்

சென்னை: கணவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால், தன் ஒரு மாத பெண் குழந்தையை கொன்ற தாயை, போலீசார் கைது செய்தனர். சென்னை புரசைவாக்கம், மூக்காத்தாள் தெரு, டைமண்ட் அடுக்குமாடி குடியிருப்பில், வெங்கல்ராவ் என்பவர், கடந்த மூன்று ஆண்டுகளாக, காவலாளியாக பணிபுரிகிறார். இவர், ஆந்திர மாநிலம் வாரங்கல்லை சேர்ந்தவர்.

சந்தேகம் என்ற நோய் : இவரது மகள் ரம்யாவுக்கும், 19, வாரங்கல்லை சேர்ந்த உறவினர் பாபுவுக்கும், 24, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இருவரும், டைமண்ட் குடியிருப்பு பகுதியில், காவலாளிக்கான அறையிலேயே வசித்து வந்தனர். பாபு பெயின்டர் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு, வர்ஷா என்ற, ஒரு மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், பாபு அடிக்கடி, அலைபேசியில் யாருடனோ பேசி உள்ளார். இது, ரம்யாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. பாபுவுக்கும், ரம்யா மீது சந்தேகம் இருந்துள்ளது. இதனால், தம்பதிகளுக்கிடையில், அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், பாபு, ரம்யாவின் தந்தை வெங்கல்ராவ் உள்ளிட்ட சிலர், வாரங்கல்லில் நடந்த திருவிழாவுக்கு சென்றனர். ரம்யா கைக்குழந்தையுடன் இருப்பதால், அவருக்கு துணையாக, பாக்யா என்ற உறவுக்கார பெண்ணை விட்டுச் சென்றனர்.

குழந்தையை கொன்றார் : நேற்று அதிகாலை, குழந்தையை காணவில்லை என, ரம்யா கூறினார். பின், குடியிருப்பு வளாகத்தில் கிடந்த பழுதடைந்த துணி துவைக்கும் இயந்திரத்தில், துணியால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில், குழந்தை இறந்து கிடப்பதாக சொல்லி கதறி அழுதார்.

தகவல் அறிந்த வேப்பேரி போலீசார், விசாரணை நடத்தினர். வெளி ஆட்கள் யாரும் இதை செய்திருக்க முடியாத நிலையில், ரம்யாவை விசாரித்தபோது, குழந்தையை கொன்றதை ஒப்புக் கொண்டார். கணவரை பிரிந்து, தனக்கென வேறொரு வாழ்க்கை அமைத்துக் கொள்ள, ரம்யா நினைத்துள்ளார். பாபு ஊருக்கு சென்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, குழந்தையை கொலை செய்துள்ளார் என்பது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் ரம்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tuesday, February 26, 2013

கற்பழிப்பைவிட தினசரி நடந்துகொண்டிருக்கும் மோசமான பெண் கொடுமை


ஒரு பெண்ணுக்கு பாலியல் கொடுமை நடந்தால் உடனடியாக அவைகூடி அடுத்தநாளே புது சட்டம் போட்டு ஆண்கள் அனைவருக்கும் “கொட்டை” நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆவேசமாக கூப்பாடு போடும் கூட்டம் பல ஆண்டுகளாக இளம் பெண்களுக்கு எதிராக நாட்டில் இருக்கும் அவலத்தைப் பற்றி கண்டு கொள்வதே இல்லை. இதில் பொது மக்களும் அடக்கம்.

பெண்களுக்கு விழிப்புணர்ச்சியும், சுய சிந்தனையும் அளிக்கும் இடங்களாகிய கல்விக் கூடங்களில் கழிவறை, குடிநீர் வசதியில்லாமல் மாணவ மாணவிகள் திண்டாடுவது காலம் காலமாக இந்தியாவில் இருந்துகொண்டிருக்கும் அவலம்.  இதைப் பற்றி இதுவரை ஒருவர்கூட குரல் கொடுத்ததில்லை.  ஏன்?

உண்மையான பெண் சுதந்திரத்தில் அக்கறை இல்லை என்பதுதான் உண்மை.  பெண்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்பட்டு சிந்திக்கும் திறன் ஏற்பட்டுவிட்டால் அவர்களை மேல்நாட்டு கவர்ச்சி வலையில் வீழ்த்தி தவறான வழிக்கு அழைத்துச் சென்று “பெண்ணுரிமை” என்ற பெயரில் பணம் சம்பாதிக்க முடியாது என்ற உண்மையை அறிந்தவர்கள் எப்போதும் நகர்ப்புற மேல்தட்டு பெண்களை மட்டுமே மையமாக வைத்து “பெண்ணுரிமை” பேசி வியாபாரம் செய்துகொண்டிருப்பார்கள். 

உங்கள் வீட்டு பெண் பிள்ளைகள் செல்லும் நகராட்சி அல்லது அரசு பள்ளிகளில் கழிவறை, குடிநீர் அடிப்படை வசதி இருக்கிறதா என்று என்றாவது நீங்கள் யோசித்ததுண்டா? உங்கள் வரிப்பணம் கற்பழிப்பிற்கு நஷ்ட ஈடு கொடுக்க மட்டும்தான் பயன்படுத்தப்படவேண்டுமா?

பிப்ரவரி 26,2013 தினமலர்


ஜோத்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தில், பள்ளிகளில் கழிப்பறை இல்லாததால், கடந்த மூன்று ஆண்டுகளில், மூன்று லட்சம் மாணவியர், படிப்பை பாதியில் கைவிட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில், பள்ளி குழந்தைகள் தொடர்பான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது; இந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாவது: ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் அரசு உள்ளது. இம்மாநிலத்தில் உள்ள பள்ளிகளில், கழிப்பறை வசதி இல்லாததால், கடந்த கல்வி ஆண்டில், 45 ஆயிரம் மாணவியர், பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டுள்ளனர்.

மூன்று ஆண்டுகளில், மொத்தம், மூன்று லட்சம் மாணவியர், இந்தப் பிரச்னைக்காக படிப்பை கைவிட்டுள்ளனர். முதல்வர் அசோக் கெலாட்டின் ஜோத்பூர் தொகுதியில், 144 பள்ளிகளிலும், மாநில கல்வி அமைச்சர், பிரிஜ்கிஷோர் சர்மாவின், ஜெய்ப்பூர் தொகுதியில், 236 பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் இல்லை.

"வரும் ஏப்ரல் மாதத்திற்குள், அனைத்து பள்ளிகளிலும், மாணவியருக்கு, தனி கழிப்பறை வசதிகளை அமைக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும், இந்த நிலைமை காணப்படுகிறது. இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிப் படிப்பை, மாணவ, மாணவியர் பாதியில் கைவிடுவதை தடுக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், சில மாநில அரசுகளின் கவனக் குறைவால், இதுபோன்ற நிலைமை காணப்படுகிறது.

Sunday, February 17, 2013

வரதட்சணை கொடுப்பது குற்றம் கிடையாது ஆனால் அது தக்க சமயத்தில் பயன்படும் ஆயுதம்!!!!

 இந்தியாவில் வழக்கமாக பெண்ணுக்கு சேர வேண்டிய குடும்ப சொத்தை திருமணத்தின்போது சீதனம் என்ற பெயரில் கொடுத்து வந்தார்கள். பிறகு அதனை கொடுக்காமல் தாங்களே சுருட்டிக்கொள்ள பெண்ணின் குடும்பத்தார் அதற்கு வரதட்சணை என்று பெயர் சூட்டியபோது பெண்ணியம் என்ற பெயரில் ஒரு கூட்டம் உள்ளே புகுந்து “வரதட்சணை தடுப்புச் சட்டம்” என்ற புதிய பணம் சம்பாதிக்கும் சட்டத்தை 1961ல் உள்ளே புகுத்தினார்கள்.
வரதட்சணை தடுப்புச் சட்டத்தின்படி வரதட்சணை கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம்.  ஆனால் இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் வரதட்சணை கொடுத்து குற்றம் புரிந்தவர் எவரும் இந்தியாவில் தண்டிக்கப்படுவதில்லை!!! அதற்கு மாறாக தான் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ததாக இந்திய சட்டத்திற்குப் புறம்பாக குடும்பத்தோடு தாங்கள் செய்த குற்றத்தை பகிரங்கமாக வெளியிட்டாலும் அரசாங்கம் கண்டுகொள்ளாது.  
 
THE DOWRY PROHIBITION ACT, 1961 
(Act No. 28 of 1961)

(20th May, 1961)

An Act to prohibit the giving or taking of dowry
3. Penalty for giving or taking dowry.-(1) If any person, after the commencement of this Act, gives or takes or abets the giving or taking of dowry, he shall be punishable with imprisonment for a term which shall not be less than five years, and with the fine which shall not be less than fifteen thousand rupees or the amount of the value of such dowry, whichever is more:

Provided that the Court may, for adequate and special reasons to be recorded in the judgment, impose a sentence of imprisonment for a term of less than five years.

இதனால் ருசி கண்டுவிட்ட பல பெண்கள் தங்கள் வசதிக்கேற்ப எப்போது கணவனை தண்டிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அப்போது தங்களது வசதிப்படி கணவனின் ஒட்டுமொத்த குடும்பத்தின் மீதும் பொய் வரதட்சணை வழக்கு பதிவு செய்துவிட்டு இந்திய காவல்துறையையும், நீதித்துதுறையும் அரசாங்க செலவில் இலவச கூலிப்படை போல பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்கள் என்பது தெரிந்தாலும் உணர்ச்சியற்ற ஜடங்களாகவே இந்திய சட்ட நடைமுறைகள் இருந்து வருகின்றன!!!

வரதட்சணை கொடுப்பது சட்டப்படி குற்றம் என்று தெரிந்திருந்தே திருமணம் செய்து கொண்டு பிறகு பல ஆண்டுகள் கழித்து திருமணத்தின்போது வரதட்சணை கொடுத்தோம் என்று கூறும் பெண்ணின் குடும்பத்தை முதலில் தண்டித்தால்தான் சமுதாயத்தில் வரதட்சணை முறை ஒழியும் என்று நீதி தெரிந்த டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தீர்ப்பில் எழுதியிருக்கிறார்.  


ஆனால் என்ன செய்வது.  இதுபோன்ற சுய உணர்வும் சிந்திக்கும் திறனும் அனைவருக்கும் இருந்துவிட்டால் நாடு நல்வழியில் சென்றுவிடுமே!!  பிறகு பொய் வழக்குகள் மூலம் லஞ்சம் வாங்கி ஊழல் செய்து அப்பாவிகளை மிரட்டி பணம் பறிக்க முடியாதே.
 
IN THE HIGH COURT OF DELHI AT NEW DELHI
CRL.M.C.7262/2006
23.02.2007
Smt. Neera Singh….. Petitioner
Versus

THE STATE (GOVT. OF NCT OF DELHI) and ORS…..Respondents

after breakdown of the marriage show the mentality of the complainant. I consider where these kinds of allegations are made, the police should simultaneously register a case under Dowry Prohibition Act (in short, the Act) against the parents of the complainant as well, who married their daughter despite demand of dowry. Section 3 of the Act prohibits giving and taking of dowry. If a woman of grown up age and well educated gets married to a person despite dowry demand, she and her family becomes accomplice in the crime under Dowry Prohibition Act.

4. Now-a-days, exorbitant claims are made about the amount spent on marriage and other ceremonies and on dowry and gifts. In some cases claim is made of spending crores of rupees on dowry without disclosing the source of income and how funds flowed. I consider time has come that courts should insist upon disclosing source of such funds and verification of income from tax returns and police should insist upon the compliance of the Rules under Dowry Prohibition Act and should not entertain any complaint, if the rules have not been complied with.
Rule 2 of the Dowry Prohibition (Maintenance of List of Presents to the Bride and Bridegroom) Rules, 1985 reads as under: ? 2. RULES IN ACCORDANCE WITH WHICH LISTS OF PRESENTS ARE TO BE MAINTAINED.-(1) The list of presents which are given at the time of the marriage to the bride shall be maintained by the bride. (2)The list of presents which are given at the time of the marriage to the bridegroom shall be maintained by the bridegroom. (3)Every list of presents referred to in Sub-rule(1) or Sub-rule(2)- (a) shall be prepared at the time of the marriage or as soon as possible after the marriage; (b) shall be in writing; (c) shall contain:- (i) a brief description of each present; (ii) the approximate value of the present; (iii) the name of the person who has given the present; and (iv) where the person giving the present is related to the bride or bridegroom, a description of such relationship. (d) shall be signed by both the bride and the bridegroom.

தாங்கள் செய்த குற்றத்தை பகிரங்கமாக செய்தித்தாளில் வெளியிட்டு மகிழக்கூடிய ஒரே நாடு.  குற்றவாளிகளை ஆதரித்து அப்பாவிகளை பொய் வழக்குகளில் சிக்க வைக்கும் ஒரே நாடு. அந்த நாட்டில் இதுபோன்ற செய்திகளை காண்பது சாதாரண விஷயம்தான்.

திருப்பூர்:வரதட்சணையாக, 1 கோடி ரூபாய் கொடுத்தும், பட்டதாரி பெண்ணை, மேலும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, கணவர் குடும்பத்தார் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர், அவிநாசியைச் சேர்ந்த, சுகுமாரன் மகன், வீரசண்முகம், 32; பிட்னஸ் சென்டர் உள்ளிட்ட, பல வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கும், கோவையை சேர்ந்த மகேந்திரன் மகள், எம்.பி.ஏ., பட்டதாரியான, ராஜேஸ்வரி, 29, என்பவருக்கும், 2005ல் திருமணம் நடந்தது.அப்போது, 100 சவரன் நகை, 10 கிலோ வெள்ளி, வைர மோதிரம் என, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை, வரதட்சனையாக பெண் வீட்டார் வழங்கினர். திருமணமாகி ஏழு ஆண்டுகளாகியும் குழந்தை பிறக்கவில்லை.இதனால், ராஜேஸ்வரியை வீரசண்முகமும், அவர் குடும்பத்தினரும் கொடுமைப்படுத்தினர். பெற்றோரிடம், 15 லட்சம் ரூபாய் வரதட்சணையாக பெற்று வருமாறும் வற்புறுத்தினர்.மனம் வெறுத்த ராஜேஸ்வரி, பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார். கோவை மத்திய அனைத்து மகளிர் போலீசில், கடந்த செப்., மாதம், புகார் செய்தார். இந்த வழக்கை, திருப்பூர் எஸ்.பி.,க்கு மாற்றம் செய்தனர்.அவரது உத்தரவை அடுத்து, திருப்பூர் அனைத்து மகளிர் போலீசார், ராஜேஸ்வரியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, அவர் கணவர் வீரசண்முகம், மாமனார், மாமியார் மற்றும் உறவினர் இருவர் மீது, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.